வெண்பாவின் காதலை மறுத்த பாரதி, சந்தோஷத்தில் கண்ணம்மா? – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வருபவை!
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது புது கதாபாத்திரங்கள் என்ட்ரிக்கு பின் கதைக்களம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் வெண்பா ரோஹித் திருமண ஏற்பாடுகளை ஷர்மிளா செய்து வருகிறார். இந்நிலையில் வெண்பா நான் பாரதியை தான் காதலிப்பதாக சொல்ல ஆனால் பாரதி அதில் விருப்பம் இல்லை என சொல்லி விடுகிறார். இந்த நிலையில் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்:
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கேரக்டரில் நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் துவங்கி இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் மாற்றப்பட்டு விட்டனர். இதனால் டாப் இடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது டல் அடிக்கிறது. கதைப்படி, பாரதி, கண்ணம்மாவை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதைத் தெரிந்து குழந்தை லட்சுமி வேதனைபடுகிறாள். இதற்கிடையே ஹேமா அப்பா யாருக்கு விவாகரத்து கொடுக்க இருக்கிறார் என்ற குழப்பத்தில் உள்ளார்.
Exams Daily Mobile App Download
மற்றொரு பக்கம் வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என அவரது அம்மா ஷர்மிளா அவருக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்த்திருக்கிறார். இந்நிலையில் மாப்பிள்ளை ரோஹித் கேரக்டரில், ‘வேலைக்காரன்’ சீரியலில் லீட் ரோலில் நடித்த சபரிநாதன் களம் இறங்கியுள்ளார். மேலும் ரோஹித்துக்கு வெண்பா பற்றிய எல்லா உண்மையும் தெரிந்தும் கூட வெண்பாவை தான் திருமணம் செய்வேன் என சொல்லிவிட்டார். இந்நிலையில் தற்போது ஷர்மிளா வெண்பா ரோஹித் திருமணம் குறித்து பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் மூர்த்தி – ரசிகர்கள் ஷாக்!
அந்த பார்ட்டிக்கு பாரதி பேமிலியை இன்வைட் பண்ணி உள்ளார், மேலும் கண்ணம்மாவும் வருகை புரிந்து உள்ளார்.அந்த சமயத்தில் சர்மிளா, வெண்பாவை கல்யாணம் செய்து கொள்ள போகும் ரோஹித்தை அனைவரும் முன் அறிமுகப்படுத்தினார். அப்போது வெண்பா தான் பாரதியை காதலிப்பதாக சொல்ல, பாரதி தனக்கு இதில் துளி கூட விருப்பம் இல்லை என சொல்கிறார். அதனால் வெண்பா அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டார். பாரதியின் வெளிப்படையான பேச்சால் சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் சந்தோசப்படுகிறார். இதையடுத்து வெண்பா என்ன முடிவு எடுப்பார், வெண்பா தன் தப்பை உணர்ந்து ரோஹித்தை திருமணம் செய்து கொள்வாரா? இல்லை மீண்டும் கண்ணம்மாவை பழிவாங்கும் நோக்கில் செல்வாரா? அடுத்து என்ன ட்விஸ்ட் வர உள்ளது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.