வெண்பாவின் சூழ்ச்சி வலையில் மீண்டும் மாட்டிக்கொண்ட பாரதி – சீரியலில் அடுத்த திருப்பம்!
பாரதியின் விருது வழங்கும் விழாவில் வெண்பா கலந்துகொள்ளாத காரணத்தினால் போலி கண்ணீர் வடித்து பாரதியிடம் நடிக்கிறார். இதனால் புது மருத்துவமனை திறப்புவிழாவின் போது நீ என்னுடன் கலந்துகொள் என பாரதி கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மா நமக்கு துரோகம் செய்யவில்லை, நாம் தான் கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகப்பட்டுவிட்டோம் என எப்போது தான் பாரதி உணர்ந்துகொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
பிரபல சீரியல் நாயகனை கரம் பிடித்த செய்தி வாசிப்பாளர் கண்மணி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
பாரதி, கண்ணம்மாவை விட்டு தூரமாக போக நினைத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டே தான் இருக்கின்றனர். தற்போது பாரதிக்கு சிறந்த மனிதநேய மருத்துவர் என்கிற விருது வழங்கப்பட்டது. பாரதி அவரால் முடிந்த உதவிகளை பல ஏழை மக்களுக்கு செய்திருக்கிறார் மற்றும் பல ஊர்களுக்கு சென்று இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார். சிறந்த மனிதநேய மருத்துவருக்கான விருதை பாரதி, லட்சுமி மற்றும் ஹேமா கையால் தான் வாங்கினார். இந்த விருது வழங்கும் விழாவிற்கு வெண்பாவை பாரதி அழைக்கவில்லை.
இதனால் பாரதியின் முன்னாடி அழுது வேஷம் போடுகிறார். உடனே வெண்பாவின் அழுகையை உண்மை என நம்பி வெண்பாவை தேற்றுகிறார். தற்போது பாரதி VB எனும் ஒரு புதிய மருத்துவமனை ஒன்றில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்துள்ளார். அதே மருத்துவமனையில் தான் கண்ணம்மாவும் அட்மின் ஆபீசராக பணியில் சேர்ந்துள்ளார். அந்த மருத்துவமனை திறப்புவிழாவிற்கு நீ கண்டிப்பாக என்னுடன் கலந்துகொள்ள வேண்டும் என பாரதி சொல்கிறார். வெண்பா, எப்படியாவது பாரதியின் நிழல் கூட கண்ணம்மாவின் மீது விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என திட்டம்போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.