முதன்முறையாக கண்ணம்மாவை புகழ்ந்து பேசும் பாரதி – “மகா சங்கமம்” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” மற்றும் “ராஜா ராணி 2” சீரியலில் கண்ணம்மாவும் பாரதியும் சந்தியாவிற்கு உதவி செய்ய அவர்களின் வீட்டில் தங்குகின்றனர். அப்போது கண்ணம்மாவின் மனதை பாரதி புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
மகா சங்கமம்:
பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 மகா சங்கமம் சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் குழந்தைகளுடன் ஜானகி அம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தென்காசி வந்திருக்கின்றனர். அங்கே சரவணன் சந்தியாவை பார்க்கின்றனர். அப்போது சந்தியாவை பழி வாங்க சாமியார் திட்டமிட அதில் சிவகாமி மீது பழி வருகிறது. அதனால் ஊரை விட்டு சிவகாமி குடும்பத்தை ஒதுக்கி வைக்கின்றனர். இதற்கெல்லாம் சந்தியா தான் காரணம் என சிவகாமி சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால் பாரதியும், கண்ணம்மாவும் சந்தியா மற்றும் சரவணன் பக்கம் இருக்கும் நியாயத்தை தெரிந்து கொண்டு ஆதரவாக இருக்கின்றனர். அவர்களின் வீட்டிலேயே தங்கி சந்தியாவிற்கு உதவியாக இருக்கின்றனர். குடும்பத்தில் நம்பிக்கை என்ற விஷயம் எந்த அளவிற்கு முக்கியம் என பாரதி புரிந்து கொள்கிறார். இது பற்றி கண்ணம்மாவிடம் அவர் கேட்க, நான் எப்போதும் மனிதர்களை நம்புபவள் என கண்ணம்மா சொல்கிறார். ஒருவர் மீது தவறு இருப்பதாக தெரிந்தும் அவர்களுடன் என்னால் பழக முடியும்.
தப்பு செய்யாதவர்கள் யார் இருக்கிறார். அதனால் அதையே நினைத்து கொண்டு ஒருவரை வாழ்நாள் முழுவதும் எடை போட முடியுமா, எல்லாத்தையும் தாண்டி சக மனிதர்களை நம்புவது தான் இந்த வாழ்க்கை. எனக்கு அடிக்கடி தோன்றும், என் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என புரிய வைக்க நினைக்காமல் கண்டிப்பாக இவர் தவறு செய்திருக்கமாட்டார் என உறுதியாக சொல்ல ஆள் வேண்டும். எனக்கு அது போல 100 பேர் இருக்காங்க. ஒன்றுமில்லாமல் இருக்கும் எனக்கே இருக்காங்க என்றால் உங்களுக்கு நிறைய பேர் இருப்பாங்க என சொல்ல, அது என்ன ஒன்றுமில்லாமல் இருப்பது என கேட்ட பாரதி, இருக்கு இல்லை என்பது பணம் புகழை வைத்து இல்லை. எந்த அளவிற்கு அடுத்தவர் உணர்ச்சியை மதிப்பது என்பதை வைத்து தான் பெரிய ஆள் என சொல்வார்கள் அந்த வகையில் நீ பெரிய ஆள் என கண்ணம்மாவை பாரதி புகழ்ந்து பேசுகிறார்.