பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Hostel Supervisor பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பாரதியார் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, Hostel Supervisor பணிக்கு என தற்போது 10 பணியிடங்கள் மட்டும் நிரப்ப உள்ளது.
- இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு (computer knowledge) கணினியில் நன்கு திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு தகுந்தாற்போல் மாத ஊதிய தொகை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.