விரைவில் விஜய் டிவியில் “நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 3” – கதாநாயகியாக “பாரதி கண்ணம்மா” நடிகை!
விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் மக்களின் மனம் கவர்ந்த சீரியலான “நாம் இருவர் நமக்கு இருவர்”, இரண்டு சீசன்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 3:
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை மையப்படுத்தி கதையுடன் ஒளிபரப்பாகி வருவதால் தனி ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். அதில் விஜய் டிவி சீரியல்கள் என்றாலே தனித்துவம் குறையாமல் இருக்கும். அந்த வகையில் நட்சத்திர பட்டாளமே நடித்து வந்த முன்னணி சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இந்த சீரியலின் முதல் பாகம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக ஒளிபரப்பானது.
பாக்கியாவை கைது செய்த போலீசார், உணவில் விஷம் வைத்த கோபி – ‘பாக்கியலட்சுமி’ தொடரில் அடுத்த திருப்பம்!
அதன் பின் இரண்டாம் பாகம் பல புதிய மாற்றங்களுக்கு பின் தொடங்கப்பட்டது. மிர்ச்சி செந்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதலில் அவருக்கு ஜோடியாக நடிகை ரட்சிதா நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அரண்மனை கிளி சீரியலில் ஜானுவாக நடித்த மோனிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மூன்றாவது சீசன் தொடங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் பலர் எதிர்பார்த்த நிலையில் தற்போது அது குறித்த ப்ரோமோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. அதில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி நடிக்க இருக்கிறார். மேலும் மிர்ச்சி செந்தில் தான் இதிலும் கலக்குவார் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ரோஷினி மிர்ச்சி செந்தில் ஜோடிக்கு இப்போது இருந்தே ரசிகர்கள் இருந்தாலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.