கணவர் கொடுமையால் மருத்துவமனைக்கு வந்த பெண், நியாயம் கேட்ட பாரதி & கண்ணம்மா – சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

0
கணவர் கொடுமையால் மருத்துவமனைக்கு வந்த பெண், நியாயம் கேட்ட பாரதி & கண்ணம்மா - சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
கணவர் கொடுமையால் மருத்துவமனைக்கு வந்த பெண், நியாயம் கேட்ட பாரதி & கண்ணம்மா - சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
கணவர் கொடுமையால் மருத்துவமனைக்கு வந்த பெண், நியாயம் கேட்ட பாரதி & கண்ணம்மா – சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். அப்போது பெண் ஒருவர் தலையில் காயத்துடன் வர கண்ணம்மா உண்மையை கண்டுபிடித்து பாரதியிடம் சொல்வது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் விக்ரம் புதிதாக மருத்துவமனை தொடங்க அங்கே பாரதி தான் சிறப்பு மருத்துவராக நியமிக்கப்படுகிறார். மேலும் அதே மருத்துவமனையில் கண்ணம்மா அட்மின் ஆபிஸராக நியமிக்கப்படுகிறார். அதனால் பாரதி கண்ணம்மாவை புரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என சௌந்தர்யா நம்புகிறார். இந்நிலையில் கண்ணம்மாவின் வேலைகளில் வேண்டும் என்றே பாரதி குற்றம் கண்டுபிடிக்க அதை எல்லாம் கண்ணம்மா பொறுத்துக் கொள்கிறார்.

Exams Daily Mobile App Download

பின் கண்ணம்மா மருத்துவமனை கேன்டீன் சாப்பாடுகளை சிறப்பாக கவனிக்க விக்ரம் அவரை நன்றாக பாராட்டுகிறார். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பெண் ஒருவர் தலையில் அடிபட்டு வர அவரது கணவர் அவரை கூட்டிக் கொண்டு வருகிறார். அவருக்கு ரத்தம் பயங்கரமாக வர அவரை உள்ளே அழைத்து செல்கின்றனர். கண்ணம்மா அந்த பெண்ணின் கணவரிடம் என்ன ஆனது என கேட்க அவள் வழுக்கி விழுந்துவிட்டால் என சொல்கிறார்.

சொந்த காசில் அப்பா, அம்மாவிற்கு வீடு கட்டி கொடுத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா – ரசிகர்கள் வாழ்த்து!

உள்ளே அந்த பெண் வலியால் துடிக்க பாரதி மருத்துவம் பார்க்கிறார். அப்போது கண்ணம்மா என்ன ஆனது என கேட்க கண்ணாடி பொருள் தலையில் விழுந்ததாக சொல்கிறார். இருவரும் வேற காரணம் சொன்னதால் கண்ணம்மாவிற்கு சந்தேகம் வருகிறது. இது பற்றி பாரதியிடம் அந்த பெண்ணின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். எல்லா கணவரையும் சந்தேகப்படுவதே உனக்கு வேலையாக இருக்கிறது என பாரதி சொல்ல கண்ணம்மா அந்த பெண்ணிடம் கணவருக்கு பயப்படாமல் உண்மையை சொல் என சொல்கிறார். உடனே அந்த பெண் தன்னுடைய கணவர் சந்தேகப்பட்டு குடித்துவிட்டு அடித்ததாக சொல்கிறார். பின் பாரதி அந்த பெண்ணின் கணவரை போலீசில் பிடித்து கொடுக்கிறார். மனைவியை சந்தேகப்படும் நீ எல்லாம் ஒரு ஆம்பளையா என பாரதி கேட்க அவரை போலீசார் அழைத்து செல்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!