வெண்பாவிற்கு சாரதியுடன் வேகமாக திருமணம் செய்து வைக்க திட்டமிடும் ஷர்மிளா – சீரியலில் அடுத்த திருப்பம்!
அறுத்ததையே அறுக்காமல் புது வித ரோல் என்ட்ரியை கொடுத்து கதைக்களத்தில் ஒரு ஸ்வாரஸ்யத்தை புகுத்தும் விதமாக இயக்குனர் பாரதி கண்ணம்மா சீரியலை சூடு பிடிக்க வைத்துள்ளார். அவ்விதமாக அடுத்த எபிசோட்டில் நடக்க உள்ள நிகழ்வுகளை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
பாரதி கண்ணம்மா:
கடந்த சில நாட்களாக ஒரே கதையை வைத்து பல மாதங்கள் ஓட்டி பல விமர்சனங்களை சந்தித்து வந்த தொடர் என்றால் அது விஜய் டிவி பாரதி கண்ணம்மா தான். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் கீழ் தள்ளப்பட்ட ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் தொடரின் இயக்குனர் தற்போது வரக்கூடிய எபிசோடுகளில் புதுப்புது சுவாரஸ்யங்களை கொடுத்து கதைக்களத்தை மாற்ற ரெடியாக இருக்கிறார் போல் தெரிகிறது. ஒரு பக்கம் குழந்தைகள் ஹேமா மற்றும் லட்சுமியை கொண்டு கதையில் திருப்பங்களை கொடுத்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
இன்னொரு பக்கம் வெண்பாவின் அம்மாவாக வந்திருக்கும் ரேகாவின் என்ட்ரி மற்றும் வெண்பாவுக்கு மாப்பிள்ளையாக சபரியின் அட்ராசிட்டிகள் சீரியலை பார்க்க தூண்டும் விதமாக கதையை காமெடி ட்ராக்காகவும் கொண்டு செல்கிறது. அவ்விதமாக இன்றைய எபிசோடில் வெண்பாவும், ரோகித்தும் படத்திற்கு போக பிளான் செய்து காரில் போகும் வழியில் விபத்தில் சிக்கிய ஒருவரை ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்கின்றனர். அதுவும் பாரதியும், கண்ணம்மாவும் வேலை செய்யும் ஆஸ்பீட்டலில் கார் நிற்க, வெண்பாவை ரோகித்துடன் பார்த்த கண்ணம்மா ஷாக் ஆகி அவரிடம் பேச்சு கொடுக்கிறார்.
உடனே ரோகித் தன்னுடைய வருங்கால மனைவி இவர்தான் என வெண்பாவை காட்ட, உடனே இந்த இனிமையான காட்சியை பாரதிக்கு காட்ட வேண்டும் என நினைத்த கண்ணம்மா, பாரதியை அவசர அவசரமாக அழைத்து வருகிறார். ரோகித்தும் வெண்பாவும் ஒன்றாக நிற்பதை பார்த்த பாரதிக்கு ஒரே ஷாக். அந்த சமயம் வெண்பாவை பார்த்து உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தம் அமோகம் என சொல்லி நக்கல் செய்கிறார் கண்ணம்மா. இதனால் அங்கிருந்து தப்பித்தது போனால் போதும் டா என சொல்லி ஓட்டம் எடுக்கிறார் வெண்பா.
Exams Daily Mobile App Download
போன மச்சான் திரும்பி வந்த கதையா! ரோஹித் டாக்டர் பாரதி என்ற பெயர் ஞாபகத்திற்கு வந்து பாரதியிடம் நக்கலாக பேசிவிட்டு நகர்கிறார். இதனால் கடுப்பான பாரதியை பார்த்து கண்ணம்மாவும் சந்தோசம் கொள்கிறார். அதன் பிறகு ரோஹித் அவனது அத்தை ஷர்மிளாவிடம் பாரதியை சந்தித்த கதையை சொல்கிறார். உடனே வெண்பாவின் அம்மா ஷர்மிளா மனதுக்குள் இந்த பாரதிக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வெண்பாவுக்கு உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் அடுத்த எபிசோடுகளில் வெண்பாவிற்கான திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.