‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய நடிகர் அகிலன் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அகிலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அகிலன் விரைவில் இத்தொடரில் இருந்து வெளியேற இருப்பதாக வெளிவந்த தகவலால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் அகிலன்
தமிழ் சின்னத்திரை தொடர்களில் முற்றிலும் மாறுபட்ட கதையோடு பயணித்து வரும் ஒரு முக்கியமான சீரியல் என்றால் அது ‘பாரதி கண்ணம்மா’ தான். காதல் மனைவியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்தும் கணவனுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து காட்டி ஜெயித்து நிற்கும் ஒரு பெண்ணை மையமாக கொண்டு தான் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் பல கதாபாத்திரங்கள் திரையுலகுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி புதுமையான முகங்கள் தான். அந்த வகையில் இந்த சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை காவ்யா சமீபத்தில் தொடரில் இருந்து விலகினார்.
புதிய நிதியாண்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு – Keka நிறுவனம் அறிவிப்பு!
இதையடுத்து இத்தொடரில் வில்லியாக நடித்து வரும் நடிகை பரினா கர்ப்பமாக இருப்பதால், அவரும் சீரியலை விட்டு விலகுவதாக சமீபகாலமாக சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இருந்தாலும் அந்த தகவலை நடிகை பரினா மறுத்துள்ளார். இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அகிலன் கதாபாத்திரத்தில், நடிகர் அருணுக்கு தம்பியாக நடித்து வரும் அகிலன் சீரியலை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை ஸ்வீட்டியும் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 & மளிகை பொருட்கள் – கால அவகாசம் நிறைவு!
அகிலன் தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருப்பது தான் அவர் சீரியலை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் தொடரில் இதுவரை முக்கிய பங்களிப்பை கொடுத்து வந்த அகிலன் இனி நடிக்கமாட்டார் எனும் செய்தி ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களுக்கு சற்று வருத்தமளிக்க கூடியதாக அமைந்துள்ளது. இருப்பினும் சீரியலில் அவர் நடித்ததற்கான நோக்கமே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான். அந்த ஆசை நிறைவேறி இருப்பதால் தற்போது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அகிலனுக்கு பகிர்ந்து வருகின்றனர்.