மன்னிப்பு கேட்ட பாரதிக்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை சொன்ன கண்ணம்மா – துடித்து போன குடும்பம்!
பாரதி கண்ணாம்மா தொடரில் தற்போது அனைத்து உண்மைகளும் பாரதிக்கு தெரிந்துவிட்டது. இனி அவர் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேக்க உள்ளார்.
விஜய் டிவி பாரதி கண்ணம்மா:
திடீரென்று பாரதிக்கு புத்தி வந்து DNA டெஸ்டிற்கு தன்னுடைய ரத்த மாதிரிகளையும், லட்சுமி மற்றும் ஹேமாவின் ரத்த மாதிரிகளையும் கொடுத்தார். தற்போது அதற்கான முடிவுகளும் வந்துவிட்டது. கண்ணம்மா எந்தவித தவறும் செய்யவில்லை என பாரதிக்கு தெரிந்து குற்ற உணர்வில் தவிக்கிறார். கண்ணம்மா காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்கவேண்டும் என சென்னை வரும் அவருக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது.
எதிர்நீச்சல்: பெற்றோரை மீறி குணசேகரன் வீட்டில் ஜனனி இருக்க ஒரே காரணம்.. அப்பத்தாவின் மாஸ் திட்டம்!
ஹேமா ஹாஸ்பிடலின் மாடியில் இருந்து தன் அப்பா யாரென்று தெரியவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார். பதறிப்போன பாரதி அனைத்து உண்மைகளையும் கூறி ஹேமாவை காப்பாற்றுகிறார். கண்ணம்மாவிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார். ஆனால் கண்ணம்மா வேறு ஒரு முடிவை எடுத்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அதாவது இனி நாம் சேர்ந்து வாழ்ந்தாலும் பெயருக்காக தான் இருக்கும். நீங்கள் என்னை சந்தேகப்பட்ட பொழுதே நம் உறவு இறந்துவிட்டது. ஒரு அப்பாவாக குழந்தைகளிடம் பழக உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி அனைவரையும் அதிர வைக்கிறார். இதை கேட்டு சௌந்தர்யா குடும்பமும் ஷாக் ஆகிறது. இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.