ரசிகர்களின் தலையில் இடியை போட்ட பாரதி கண்ணம்மா.. முடிவில் இருந்து பின் வாங்கிய சீரியல் குழு!
தற்போது சின்னத்திரை ரசிகர்கள் பலரும் எப்பொழுது பாரதி கண்ணம்மா தொடர் முடிவடையும் என்று தான் காத்துக்கொண்டுள்ளனர். ஏனெனில் கதையில் முக்கிய முடிச்சுகள் அவிழ்ந்து விட்டன. தற்போது இது குறித்த முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
பாரதி கண்ணம்மா:
சென்ற ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் TRP-யில் பலமுறை உச்சத்தை தொட்டுள்ளது. அதனாலேயே சீரியலை முடிக்க மனம் இல்லாமல் தொடர்ந்து இந்த தொடர் இழுக்கப்பட்டு வந்தது. இதுவே ரசிகர்களுக்கு இந்த தொடர் மீது இருந்த ஈர்ப்பை குறைத்தது.
தற்போது DNA டெஸ்ட் முடிவுகளும் பாரதிக்கு தெரிய உள்ள நிலையில் மீண்டும் பழையபடி கடந்த சில வாரங்களாக இந்த தொடர் நல்ல ஒரு ரேட்டிங்கை பெற்று வருகிறது. இதனால் சீரியலை முடிக்கலாம் என எண்ணி இருந்த விஜய் டிவி தற்போது இந்த தொடரை மேலும் ஒரு மாதம் டெலிகாஸ்ட் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே வெண்பா ரோஹித்தை ஏற்றுக்கொள்வது, பாரதி தன் தவறை உணர்வது, ருத்ராவின் ரீஎன்ட்ரி போன்ற ட்ராக்குகள் வர உள்ளதால் வரும் ஜனவரியில் தான் இந்த சீரியல் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் கிளைமாக்ஸ் காட்சி எவ்வாறு இருக்கும் என யோசித்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாக உள்ளது.