அதிரடி என்ட்ரியால் வெண்பாவின் சுயரூபத்தை அறிந்த பாரதி – பாரதி கண்ணம்மா முக்கிய ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்த போதிலும், எபிசோடுகள் செல்ல செல்ல உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வர உள்ளது.
வெண்பாவின் சுயரூபம்:
பாரதியும் கண்ணம்மாவும் கிட்டத்தட்ட 10 வருடங்களாக வெண்பா செய்த சாதியின் காரணமாக பிரிந்து உள்ளனர். இவர்களை தவிர இவர்களின் குழந்தைகளான ஹேமா மற்றும் லக்ஷ்மியும் இத்தனை வருடங்களாக பல கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளனர். இத்தனை வருடம் கழித்து தற்போது தான் பாரதிக்கு கண்ணம்மா சொல்வது ஏன் உண்மையாக இருக்க கூடாது என்று யோசித்து யாருக்கும் தெரியாமல் DNA டெஸ்ட் எடுத்து பார்க்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
அப்போது தான் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தனது குழந்தைகள் என்ற உண்மை தெரிய வந்து, கண்ணம்மா உட்பட அனைவரிடமும் உடனடியாக மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அப்போது திடீரென்று வெண்பா அது உண்மை இல்லை, நீ முன்னதாக எடுத்த டெஸ்ட் படித்தான் உனக்கு குழந்தை பிறக்க முடியாதே என்று சொல்லுகிறார்.
ராதிகாவிடம் நெருக்கமாக இருக்க நினைக்கும் கோபி.. குறுக்கே வந்த இனியா- “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
Exams Daily Mobile App Download
வெண்பா சொன்னதும், பாரதியும் மீண்டும் குழப்பம் அடைகிறார். அப்போது தான் வெண்பாவின் கஸ்டடியில் இருந்த துர்கா தப்பித்து வருகிறார். அவர் தான் முன்னர் எடுத்த டெஸ்ட் ரிப்போர்டை மாற்றி வைத்ததாக சொன்னதும், வெண்பாவின் சுயரூபம் பாரதிக்கு தெரிய வருகிறது. இதனால் இத்தனை வருடம் என் வாழ்க்கையை கெடுத்தது போதாது என்று, இன்னும் என்னை முட்டாளாக பார்க்கிறாயா? என்று வெண்பாவை பளார் பளார் என்று அடித்து விடுகிறார். இந்த காட்சிகள் இனிவரும் நாட்களில் வர உள்ளது.