குழந்தை பிறந்த பின் மீண்டும் நடிக்க துவங்கிய ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா – வைரல் வீடியோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடித்து வந்த நடிகை பரினா தனது பிரசவத்துக்காக சீரியலை விட்டு சிறிது காலம் விலகி இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மீண்டுமாக தனது நடிப்பு பணியை துவங்கி இருக்கிறார்.
நடிகை பரினா
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் ஒரு முக்கியமான சீரியல் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’. சின்னத்திரை சீரியல்களில் அதிகபட்ச மக்களின் கவனம் ஈர்த்து பலரது பேவரைட் ஆக மாறி இருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கலகலப்பான எபிசோடுகளுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் வெண்பாவின் சதி திட்டத்தால் பிரிந்த பாரதி மற்றும் கண்ணம்மா ஜோடி மீண்டுமாக வெண்பாவின் தூண்டுதலால் ஒன்றாக சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல், பொதுமுடக்கம்? ஓமைக்ரான் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!
அதாவது கண்ணம்மா தவறான பெண் என பாரதியை தூண்டி விடும் வெண்பா பல கட்ட முயற்சிக்கு பிறகு இருவரையும் பிரித்து விடுகிறார். அதே நேரத்தில், 8 ஆண்டுகள் கழித்து பாரதியும், கண்ணம்மாவும் மீண்டும் சந்திக்க இருவரும் சேர்ந்து விடுவார்களோ என்று அச்சப்படும் வெண்பா விவாகரத்து விஷயத்தை கையில் எடுக்கிறார். ஆனால் இந்த பிரச்சனை பாரதி, கண்ணம்மாவுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடித்து, வில்லத்தனத்துக்கு பெயர் போன நடிகை பரினா தற்போது சீரியலை விட்டு சில காலம் விலகி இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் – அரசாணை வெளியீடு!
அதாவது தனது முதல் குழந்தையின் பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகி இருக்கும் நடிகை பரினா குழந்தை பிறப்புக்கு பின்பாக மீண்டுமாக நடிக்க வந்திருக்கிறார். அந்த வகையில் ‘டாக்டர்’ திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனத்துக்கு ரீல்ஸ் செய்துள்ள பரினா அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தனது நடிப்பு பணியை துவங்கிய நடிகை பரினாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.