பாரதி, கண்ணம்மாவை விவாகரத்து செய்யக்கூடாது என சத்தியம் வாங்கும் ஹேமா – சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா தான் தன்னுடைய சொந்த அம்மா என்று தெரியாமல் ஹேமா, பாரதியிடம் அவரை விவாகரத்து செய்ய வேண்டாம் என்று கெஞ்சுவது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பல்வேறு பாசப்போராட்டங்களுக்கு பிறகு தற்போது பாரதி, கண்ணம்மாவை விவாகரத்து செய்யப் போவதில்லை என்று முடிவு செய்கிறார். அதாவது, வெண்பாவின் தூண்டுதலின் பேரில் கண்ணம்மாவை விட்டு பிரிந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து அவரை விவகாரத்து செய்ய முடிவு செய்கிறார் பாரதி. ஆனால் கோர்ட் உத்தரவுப்படி சில நாட்களுக்கு கண்ணம்மா வீட்டில் பாரதி தங்கி இருந்தாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று மீண்டும் அவர் சௌந்தர்யா வீட்டுக்கு சென்று விடுகிறார்.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் லட்சுமி அவரது அப்பாவை பற்றி அறிந்து கொண்டது, வெண்பாவின் திருமணம் என பல கதைக்களங்கள் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒளிபரப்பானது. இந்த நிலையில், இந்த சீரியலில் திடீர் திருப்பமாக கண்ணம்மா தான் தன்னுடைய சொந்த அம்மா என்று தெரியாமல் பாரதியிடம் அவரை விவாகரத்து செய்ய வேண்டாம் என்று ஹேமா கெஞ்சுவது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் பாரதி, கண்ணம்மாவை விவாகரத்து செய்யக்கூடாது என அவரிடம் சத்தியம் வாங்குகிறார் ஹேமா.
தையல் வேலை செய்யும் கதிர் & முல்லை – சுவாரஸ்ய திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!
இதனால் பாரதிக்குள் ஏதாவதொரு மனமாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் சமீபத்திய எபிசோடுகள் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்று வரும் சாரதி மற்றும் வெண்பாவின் கதைக்களத்தில் ஒரு புதிய ட்விஸ்டு காத்திருக்கிறது. அதாவது, அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர் போலவும், பணக்காரர் என்றும் தன்னை காட்டிக்கொள்ளும் சாரதி உண்மையில் அப்படி இல்லை என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. இந்த உண்மை வெளிச்சத்துக்கு வரும் போது வெண்பா என்ன செய்வார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.