கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுத்த பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுத்த பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுத்த பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுத்த பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றிய சாரதியை விருந்துக்கு வெண்பா அழைக்கிறார். மறுபக்கம் மாப்பிள்ளை வர இருப்பதாக ஷர்மிளா சொல்கிறார் . அடுத்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடக்க இருப்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ரவுடிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிய நபரை வீட்டுக்கு விருந்துக்கு வர சொல்கிறார் வெண்பா. சண்டை முடிந்து வீட்டுக்கு வந்த வெண்பா சர்மிளாவிடம் சண்டையை பற்றி கூறுகிறார். பின்னர் தன்னை காப்பாற்றியவரை நாளைக்கு விருந்துக்கு கூப்பிட்டு இருக்கேன் என்கிறார். பின்னர் நாளைக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வேற வராங்க என ஷர்மிளா கூற, நீ உன்னோட கெஸ்ட்டை கவனி. நான் என்னோட கெஸ்ட்டை கவனிக்கிறேன் எனக்கிறார் வெண்பா.

Exams Daily Mobile App Download

ஒரு பக்கம் வெண்பா வீட்டில் இவ்ளோ விஷயம் நடக்க, இந்த பக்கம் பாரதி நடந்து கொண்ட விதத்தை பார்த்த லட்சுமி கவலையுடன் தனியாக உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் ஹேமா இங்க என்ன தனியா உட்கார்ந்து இருக்க. நான் போட்டோ எடுக்க உன்னை எங்க எங்க தேடுனேன். வா போகலாம் என கூப்பிடுகிறார் ஹேமா. ஹேமாவிடம் நீ போ நா வரல என சொல்கிறார் லட்சுமி.

பின் ஹேமாவிடம் டாக்டர் அப்பாவுக்கும், சமையல் அம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு சொன்னது என்னாச்சு என கேட்கிறார் லட்சுமி. அதற்கு ஹேமா இதைப்பத்தி அப்பாவிடம் நான் ஸ்டேஜ்ல பேசுனேன். ஆனா அப்பா உனக்கு நான். எனக்கு நீன்னு சொல்லிட்டாரு என சொல்கிறார். ஆனால் நம்ம எப்படியாவது இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்போம் என கூறுகிறார் ஹேமா. எப்படியாது அம்மா, அப்பா டைவர்ஸ் வாங்காம பார்த்துக்கணும் என யோசிக்கிறார் லட்சுமி.

ராதிகாவுக்கு ஆறுதல் சொல்ல வந்த பாக்கியா, ராதிகாவின் முடிவு என்ன? “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

இதனிடையில் பாரதி ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் சௌந்தர்யா அவரிடம் கோர்ட்டில் இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்திருப்பதாக கூறுகிறார். இவ்வளவு நாளா நீ கண்ணம்மாவுக்கு கொடுத்த கஷ்டம் போதாத இன்னும் அவளை எவ்ளோ கஷ்டம் படுத்துவ என கேட்கிறார் சௌந்தர்யா. இப்போதைக்கு இந்த டைவர்ஸ் பத்தி எதுவும் பேசாத என அவர் கூற, நான் கண்ணம்மாவிற்கு ஜீவனாம்சம் தர்றேன் என்று கூட சொல்லிட்டேன். லஷ்மியையும் நான்தான் படிக்க வைக்கிறேன் இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது என பாரதி கூறுகிறார்.

பின்னர், சௌந்தர்யா பாரதியை எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார், அதற்கு பாரதி நான் நம்பிக்கை துரோகத்தை பார்த்துட்டேன். இதுக்கு மேலையும் யாரையும் நான் நம்ப மாட்டேன் என கூறுகிறார். நான் கண்ணம்மாவுக்கு கண்டிப்பா டைவர்ஸ் கொடுக்க போவதாகவும், இதைப்பத்தி இனிமே என்கிட்ட பேசாதீங்க என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார் பாரதி. இதனால் சௌந்தர்யா மீண்டும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!