பாரத் பயோடெக்கின் நாசிவழி தடுப்பூசி iNCOVACC அறிமுகம் – விலை என்ன தெரியுமா??
இந்தியாவில் கொரோனா நோய்த்தடுப்பு திட்டத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசிவழி தடுப்பூசி சேர்க்க அனுமதித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்த தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பதையும் மற்றும் இதன் விலை குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.
நாசிவழி தடுப்பூசி:
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் சில மாநிலங்களில் BF.7 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி செலுத்தி கொள்வது, முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசிவழி தடுப்பூசி பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நாசிவழி தடுப்பூசியை நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை செலுத்திவர்களும் இதனை பூஸ்டர் தடுப்பூசியாக நாசி வழியில் செலுத்தி கொள்ளலாம்.
இனி அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர் – உற்பத்தி நிறுவனங்களுக்கு மார்ச் 2025 வரை காலக்கெடு!
Exams Daily Mobile App Download
இந்த நாசி வழியான தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் ரூ.325க்கும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியானது ஜனவரி மாதம் 4ம் வாரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.