கோவாக்சின் தடுப்பு மருந்து விலை குறைப்பு – பாரத் பயோடெக் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் இந்த தடுப்பு மருந்துகளின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் உள்ளன. மும்பை புனேயில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளையும், பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்துகளையும் தயாரித்து மாநில அரசுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. தவிர பல நாடுகளுக்கும் இந்த மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக கொரோனா முன்கள பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அனைவருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது மூன்றாம் கட்டமாக மே மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த தடுப்பு மருந்துகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட உள்ளன. இந்த தடுப்பு மருந்துகளுக்கான விலை அதிகமாக காணப்படுவதாக பல மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்தது. இந்த நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் விலையில் 100 ரூபாய் குறைக்கப்பட்டது.
தமிழகத்தில் இரவு, வார இறுதி ஊரடங்கு ரத்து? உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
இதை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்து 200 ரூபாய் குறைக்கப்பட்டு 400 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கோவாக்சின் மருந்து 600 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படும் கோவாக்சின் மருந்துகளின் விலையில் மாற்றமில்லாமல் 1,200 ரூபாயாக விற்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.