கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய கோபி.. அதிர்ந்து போன ராதிகா குடும்பம் – வைரல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் திருமண ஏற்பாடுகள் நடக்க, ராமமூர்த்தி உடல்நிலை மிகவும் மோசமாகிவிடுகிறது. அதனால் கோபி இந்த திருமணம் வேண்டாம் என சொல்ல, சந்துருவும் ராதிகாவும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
பாக்கியலட்சுமி
விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ராதிகாவின் திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. தனது கணவரின் திருமணத்தில் தான் சமைக்கிறோம் என தெரியாமல் பாக்கியா செல்வியுடன் இணைந்து சமையலை செய்ய தொடங்குகிறார். மறுபக்கம் ஈஸ்வரி வெளியே போன ராமமூர்த்தி என்ன செய்ய போகிறார் என தெரியாமல் குழம்புகிறார். ராமமூர்த்தியோ எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என கோவமாக ரோட்டில் நடந்து வருகிறார்.
அப்போது ராதிகா வீடு பூட்டி இருக்க, ராமமூர்த்திக்கு வருத்தத்தில் நெஞ்சு வலி வருகிறது. அக்கம் பக்கத்தினர் ராமமூர்த்தியை மருத்துவமனையில் சேர்க்க ஈஸ்வரிக்கு தகவல் சொல்லப்படுகிறது. அப்போது அனைவரும் வர இதற்கு மேல் தாத்தாவின் உயிரை காப்பாற்றுவது கஷ்டம் என சொல்கிறார் மருத்துவர். இந்த நிலையில் ஈஸ்வரி கோபிக்கு போன் செய்து விவரத்தை சொல்கிறார். அப்போது அப்பா பாசத்தில் கோபி கிளம்ப நினைத்து திருமண மேடையில் இருந்து எழுகிறார்.
சமையல் வேலைகளை செய்யும் பாக்கியா, மண்டபத்திற்கு வந்த கோபி ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !
Exams Daily Mobile App Download
என்ன ஆனது என சந்துரு கேட்க, என் அப்பாவிற்கு உடம்பு சரி இல்லை என கோபி சொல்கிறார். எதுனாலும் தாலி கட்டிவிட்டு பேசலாம் என சந்துரு சொல்ல, ஆனால் கோபி இப்போ நான் உடனே போக வேண்டும். நான் நிச்சயம் ராதிகா கழுத்தில் தாலி கட்டுவேன், ஆனால் அதற்கான நேரம் இது இல்லை என சொல்கிறார். கோபியின் இந்த முடிவை கேட்டு ராதிகா குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடில் காட்டப்பட இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்