இனியாவை பார்க்க முட்டுக்கட்டை போட்ட ராதிகா, பரிதாபத்தில் கோபியின் நிலை- எதிர்பார்ப்புகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் திருமணம் பல எதிர்ப்புகளை தாண்டி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் திருமண மண்டபத்தில் நடந்ததை நினைத்து ராதிகா, கோபி மீது கோவமாக இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் நடந்து முடிந்துவிட்டது. பாக்கியாவை விட்டு விட்டு கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்டிவிட்டார். குடும்பத்தினர் எவ்வளவோ தடுத்தும் கூட கோபியின் திருமணத்தை நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு வந்த ஈஸ்வரி, கோபி ராதிகாவுக்கு பயங்கர சாபம் கொடுத்து பேசுகிறார். இனிமேல் பாக்கியாவிற்கும் என் பேரக் குழந்தைகளுக்கும் நான் இருக்கிறேன் என ஆறுதல் சொல்லி அழைத்து செல்கிறார்.
ஈஸ்வரி பேசியதை எல்லாம் கேட்டு கோபி அமைதியாக இருந்ததால், ராதிகா கோபி மீது கோவமாக இருக்கிறார். வீட்டிற்கு வரும் வழியில் கோபி ராதிகாவை சமாதானம் படுத்த நினைக்க, ஆனால் ராதிகாவுக்கு கோவம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் கோபிக்கு இனியாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அது பற்றி ராதிகாவிடம் சொல்ல, ஆனால் ராதிகா மண்டபத்தில் நடந்ததை நினைத்து போகக் கூடாது என தடுக்கிறார்.
புது சீரியலில் கமிட்டான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
அதனால் கோபிக்கு ராதிகா மீது கோவம் வருகிறது. ஆனால் பாக்கியாவை போல ராதிகாவை திட்ட முடியாது என்பதால் கோபி பொறுமையாக இருக்கிறார். இந்நிலையில் இனியா கண் முன்னே மயூவை கொஞ்ச வைத்து ராதிகா வெறுப்பேத்த, தன்னுடைய அப்பாவை கைதி போல நடத்துவதை பார்த்து இனியா வருத்தப்படுகிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. கோபியின் சுயரூபம் ராதிகாவுக்கு தெரிய வரும் போது தான் சீரியல் கதை சூடு பிடிக்கும் என்பதால் ரசிகர்கள் அடுத்து வரும் எபிசோடுகளை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்