சிறந்த அம்மாவாக பரிசு பெறும் பாக்கியா, உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இனியா – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவின் ஸ்கூலிற்கு அன்னையர் தின நிகழ்ச்சிக்காக பாக்கியா செல்கிறார். அப்போது அங்கே சிறப்பு நடுவராக நடிகை ரேகா வருகிறார். பாக்கியா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறந்த அம்மா என்ற பட்டம் பெறுகிறார்.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் இல்லத்தரசிகளுக்கான சீரியலான பாக்கியலட்சுமியில், இனியாவின் ஸ்கூலில் அன்னையர் தின விழா நடைபெறுகிறது. அதற்கு இனியாவுடன் சேர்ந்து பாக்கியாவும் செல்கிறார். பாக்கியாவிற்கு எதுவும் தெரியாது என்று இனியா பயத்துடன் இருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ரேகா வருகிறார். அதன் பின்னர் பாக்கியா பூ பூக்கும் ஓசை பாட்டிற்கு அருமையாக நடனம் ஆடுகிறார்.
சன் டிவி “ரோஜா” சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!
அதை பார்த்த இனியா அதிர்ச்சி அடைகிறார். மேலும் நடுவராக ரேகாவும் நன்றாக ரசித்து பார்க்கிறார். இறுதியாக கேள்வி கேட்கும் சுற்று நடைபெறுகிறது . அதில் ரேகா சிறந்த அம்மா எப்படி இருக்க வேண்டும் என கேள்வி கேட்கிறார். அதற்கு பாக்கியா உலகத்தில் உள்ள எல்லா அம்மாவும் அவங்க பிள்ளைகளுக்கு சிறந்த அம்மா தான், தன்னுடைய சந்தோசத்தை விட்டுவிட்டு வாழ்கிற எல்லா அம்மாவும் சிறந்த அம்மா தான் என பாக்கியா சொல்கிறார்.
அதை கேட்டு இனியாவிற்கு பெருமையாக உள்ளது. முதன் முறையாக தனது திறமையை பாக்கியா எல்லார் முன்னாடியும் காட்டுகிறார். பின்னர் சிறந்த அம்மாவிற்கான விருது அறிவிக்கின்றனர். அதில் “Best Mom 2021” பாக்கியலட்சுமி என சொல்லி அவருக்கு நடிகை ரேகா விருது வழங்குகிறார். பின்னர் இனியா ஓடி வந்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிக்கிறார். பின்னர் ரேகா பாக்கியாவுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார். அம்மா என்றால் அது உங்களை போல தான் இருக்க வேண்டும் என ரேகா வாழ்த்து தெரிவிக்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்களுக்கு எபிசோட் விறுவிறுப்பாக செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.