ராதிகாவிற்கு வாங்கிய சேலையை கோபி காரில் இருந்து எடுக்கும் பாக்கியா – பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியின் “பாக்கியலட்சுமி” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் கோபி பாக்கியாவிடம் மாட்டி கொண்டார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப பாங்கான சீரியல் தான், பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஒரு குடும்ப பெண் எது போன்ற சவால்களை சந்தித்து தனக்கு பிடித்தவற்றை செய்து கொள்கிறார் என்பதனை எதார்த்தமாக காட்டி வருகின்றனர். இதனால் இந்த சீரியலுக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்று தான் கூற வேண்டும். தற்போது இந்த சீரியலில் கோபி பாக்கியாவிற்கு தெரியாமல் ராதிகாவை சந்திப்பது, அவருடன் பழகுவது என்று இருந்து வருகிறார். இதனை கண்டுபிடிக்கும் எழில் தனது அம்மாவிற்காக அவரை மன்னித்து விடுகிறார். அதே போல இனி இது போல செய்யக் கூடாது என்றும் எச்சரிக்கிறார்.
பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு ஏற்படவுள்ள சோகமான முடிவு – வெண்பா அளித்த பதில்!
ஆனால், கோபி திருந்திய பாடு இல்லை. தொடர்ந்து ராதிகாவை பார்த்து கொள்வது மற்றும் அவரிடம் பேசுவது என்று தான் இருக்கிறார். தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் ஒன்றாக கடைக்கு வந்ததை வீட்டு வேலைக்காரி செல்வி பார்த்து விட்டு அதனை பாக்கியாவிடம் தெரிவிக்கிறார். முதலில், நம்ப மறுக்கும் பாக்கியா பின்னர் கோபியின் நடவடிக்கைகளை கண்டு சந்தேகம் அடைகிறார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கோபி ராதிகாவிற்கு என்று ஒரு சேலை எடுக்கிறார். அதனை வீட்டிற்கு எடுத்து வராமல், காரில் மறந்து வைத்து விட்டு வருகிறார். இதனை பார்த்து விட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். யாருக்காக இந்த சேலை என்று யோசிக்கிறார். பின்னர், அதனை எடுத்து கோபியிடம் காட்டுகிறார். பாக்கியா சேலையை எடுத்து காட்டியதும் கோபி அதிர்ச்சி அடைந்து என்ன கூறுவதென்று தெரியாமல் முழிக்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.