பாக்கியாவின் பாடலை ரசித்த கோபி, சமையல் போட்டி பற்றி ஐடியா கொடுத்த முல்லை – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
பாக்கியாவின் பாடலை ரசித்த கோபி, சமையல் போட்டி பற்றி
பாக்கியாவின் பாடலை ரசித்த கோபி, சமையல் போட்டி பற்றி

பாக்கியாவின் பாடலை ரசித்த கோபி, சமையல் போட்டி பற்றி ஐடியா கொடுத்த முல்லை – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பாக்கியாவை அனைவரும் பாடல் பாட சொல்ல, பாக்கியா அருமையாக பாடுகிறார். பாக்கியா பாடுவதை கேட்டு அனைவரும் அவரை பாராட்டுகிறார்கள். மறுபக்கம் கோபியை ராமமூர்த்தியும் கண்ணனும் வெறுப்பேற்றி பேசுகின்றனர்.

மகா சங்கமம்

இன்று “மகா சங்கமம்” சீரியலில், பாக்கியாவை அனைவரும் பாடல் பாட சொல்ல உடனே பாக்கியா மிகவும் அருமையாக பாடல் பாடுகிறார். பாக்கியாவின் பாடலை கோபி மெய்மறந்து கேட்க, உடனே அவர் பாக்கியாவை பாராட்டி கை தட்டுகிறார். பின் ராதிகா அதை பார்த்து என் முன்னாள் அவரை பாராட்டி கை தட்டுறீங்க என சொல்லி கோவமாக கிளம்புகிறார். பின் அனைவரும் பாக்கியாவின் பாடலை பார்த்து பாராட்டுகின்றனர். மறுபக்கம் ராமமூர்த்தி கோபியை நினைத்து கோவமாக இருக்க மூர்த்தி அவரை பார்க்க வருகிறார். ராமமூர்த்தி கோபி செய்வதை நினைத்து வருத்தமாக இருக்க, கோபி அக்கா இவ்வளவு தைரியமாக இருப்பது பெரிய விஷயம் என சொல்கிறார்.

பின் மூர்த்தி ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கம் கண்ணன் எழிலிடம் சரக்கு எதாவது கிடைக்குமா என கேட்க அதை கேட்ட ஐஸ்வர்யா எனக்கும் என கேட்கிறார். பின் கண்ணன் ஐஸ்வர்யாவை கொஞ்ச பின் கண்ணனை அவர் கண்டிக்கிறார். மறுபக்கம் தனம் பாக்கியா பேசிக் கொண்டிருக்க, பாக்கியாவிற்கு தொழில் சம்மந்தமாக போன் வருகிறது. அந்த நேரம் பார்த்து கோபி வர, கோபி பாக்கியாவை திட்ட தொடங்குகிறார்.எங்கே  போனாலும் என் நிம்மதியை கெடுக்க வருகிறாய் என கேட்கிறார். பின் பாக்கியா நீங்க பேசுவதை எல்லாம் கேட்க நான் பழைய பாக்கியா இல்லை என சொல்கிறார். அப்போது கோபி நாங்க சந்தோசமாக இருப்பதை பார்த்து உனக்கு பொறாமையாக இருக்கிறதா என கேட்கிறார்.

அப்போது தனம் வர, அவர் பேசுவதை எல்லாம் ஏன் கேட்குறீங்க என கேட்கிறார். பாக்கியா நமக்கு சம்மந்தம் இல்லாதவர்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை என சொல்கிறார். பின் தனம் அவர் பேசுவதை கேட்காதீங்க என சொல்ல, எனக்கு அதை பற்றி கவலை இல்லை என சொல்கிறார். பின் மீனா ஜீவாவிடம் சினிமாவிற்கு கூட்டிக் கொண்டு செல்ல சொல்ல, ஆனால் ஜீவா வேலை இருப்பதாக சொல்கிறார். பின் மீனா மதியம் சாப்பிட வர சொல்கிறார். பின் எல்லாரும் போட்டிங் போக வருகின்றனர். எல்லாரும் ஒரே போட்டில் கிளம்பி செல்கின்றனர். மறுபக்கம் முல்லை கதிரை வர சொல்ல, கதிர் என்ன விஷயம் என கேட்கிறார். அப்போது முல்லை நியூஸ் பேப்பரில் போட்டி ஒன்று நடப்பதாக சொல்கிறார்.

அப்போது கதிர்  அதெல்லாம் வேண்டாம் என சொல்ல ஆனால் முல்லை கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். ஆனால் கதிர் வேண்டாம் என சொல்கிறார். மறுபக்கம் கோபி ராதிகா போட்டிங் செல்ல. கண்ணனும் ராமமூர்த்தியும் அவர்களது போட்டில் ஏறுகிறார். ஆனால் கோபிக்கு அது தெரியாமல் இருக்க அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது ராமமூர்த்தி பாடல் பாடி அவர்களை வெறுப்பேத்த, கோபி போட்டை நிறுத்த சொல்கிறார். ஆனால் முடியாது என சொல்கிறார். இத்துடன்இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!