எனக்கு Divorce வேணும்.. பொறுமை இழந்து ராதிகா எடுத்த முடிவு .. அதிர்ச்சியில் கோபி – பாக்கியலட்சுமி அப்டேட்!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் ராதிகாவிற்கு இடையில் தற்போது இனியாவை வைத்து அடிக்கடி சண்டை வர தொடங்கியுள்ளது. இதனால் கோபி யாருக்கு சப்போர்ட் செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருகிறார்.
விவாகரத்து முடிவில் ராதிகா:
கோபி தனது மனைவி பாக்கியாவிற்கு மட்டும் தான் நல்ல கணவராக நடந்து கொள்ளவில்லை. ஆனால் தனது குழந்தைகள் மற்றும் அம்மா, அப்பாவை மிகவும் பாசமாக கவனித்துக் கொள்ளும் நபராக இருந்தார். இதனால் தான் பாக்கியாவும் இத்தனை வருடங்களாக பொறுமையாக இருந்தார். தற்போது இனியா ஸ்கூலில் செய்த சேட்டை காரணமாக வீட்டில் இருக்கும் அனைவரும் இனியாவை கண்டிக்க, இனியா இனிமேல் இங்கே இருக்க மாட்டேன் என்று கோபியுடன் ராதிகா வீட்டிற்கு சென்று விட்டார்.
Follow our Instagram for more Latest Updates
இனியாவை பார்த்துக் கொள்வதற்காக ராமமூர்த்தி தாத்தாவும் அங்கு சென்று விட்டார். இனியா மற்றும் ராதிகாவிற்கு எப்போது பார்த்தாலும் சண்டை வர, காபி குடிக்கலையா என்று ராதிகா கேட்க சின்ன விஷயத்தை இனியா பெரிய சண்டையாக்கி விடுகிறார். உங்களுக்கு நான் முக்கியமா? இவங்க முக்கியமா டாடி? என்று இனியா கேட்க, நீ தான் முக்கியம் என்று கோபி அனைவர் முன்னாடியும் சொல்லி விடுகிறார். இதனால் தனக்கு கோபி மரியாதை கொடுக்கவில்லை என்று ராதிகா அவரிடம் கோவப்படுகிறார்.
கணவரை பிரிந்த நிலையில் பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு – வைரலாகும் புகைப்படங்கள்!
Exams Daily Mobile App Download
இப்படியே நாளடைவில் கோபிக்கும் ராதிகாவிற்கும் சண்டை அதிகமாகி வர, பொறுமையை இழந்த ராதிகா, கோபியிடம் எனக்கு Divorce வேணும் என்று சொல்லி விடுகிறார். ராதிகாவின் முடிவை கண்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். இதன்பிறகு கோபி என்ன முடிவெடுப்பார் என்பது போன்ற சுவாரஸ்யமான எபிசோடுகள் வர உள்ளது.