ராதிகாவை சந்தித்து நியாயத்தை கேட்கும் பாக்கியா, துணை நிற்கும் செல்வி – அடுத்த வார எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்யாவுக்கு கோபி பற்றிய எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது. கோபி பழகி வரும் பெண் ராதிகா என்பதை தெரிந்து கொண்டு அதை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். இந்நிலையில் அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. கோபியின் லீலைகள் எல்லாம் பொறுக்க முடியாத மக்கள் அவர் எப்போது சிக்குவார் என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது எல்லாம் நடந்துள்ளது. கோபி ஏமாற்றியது எல்லாம் பாக்கியாவிற்கும் குடும்பத்திற்கும் தெரிந்துவிட்டது. அதனால் குடும்பத்தில் அனைவரும் மனவருத்தத்தில் இருக்கின்றனர். கோபி தன்னை ஏமாற்றியதை விட அவர் ராதிகா உடன் பழகி வருவது தெரிந்து பாக்கியாவால் தாங்கி கொள்ள முடியவில்லை.
Exams Daily Mobile App Download
அதனால் மனம் உடைந்த பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். அவர் போனதை நினைத்து ஈஸ்வரி, ராமமூர்த்தி, இனியா, செழியன், ஜெனி என அனைவரும் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். கோபி தான் செய்தது தவறு என்பதை உணருகிறார். இதற்கிடையே ராதிகா ஊரை விட்டு செல்ல முடிவு செய்கிறார். மயூரா புது ஊருக்கு செல்வதை நினைத்து மன வருத்தப்படுகிறார். ஆனாலும் ராதிகா தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.
ராதிகாவிடம் நியாயம் கேட்க வரும் பாக்கியா – அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் பாக்கியாவும் செல்வியும் ராதிகா வீட்டிற்கு பயங்கர கோபத்துடன் வருகின்றனர். ராதிகா கதவை திறக்க உள்ளே வாங்க டீச்சர் என்று சொல்கிறார். அதன் பின் உள்ளே வந்த பாக்கியா ராதிகாவை பார்த்து நீங்களும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என கேட்கிறார். பாக்கியா கேட்டதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் ராதிகா பாக்கியாவிற்கு எதிராக மாறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.