ராதிகாவிடம் நியாயம் கேட்க வரும் பாக்கியா – அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையேயான தொடர்பு பற்றி குடும்பத்தார் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்நிலையில், ராதிகாவிடம் பாக்கியா நியாயம் கேட்டு ராதிகாவின் வீட்டிற்கு வரும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் குடும்பத்தை விட்டே பாக்கியா பிரிந்து வெளியே சென்று விடுகிறார். இதற்கு பிறகு பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்க போகிறது என குடும்பத்தினர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது, உங்களுக்கு பிடிக்காத மனைவியாக இத்தனை நாட்களாக உங்களுடனே இருந்தேன். ஆனால், எப்போது இன்னொரு பெண்ணை தேடி சென்றீர்களோ அப்பொழுதே இந்த வீட்டில் இருக்க எனக்கு உரிமை இல்லை.
Exams Daily Mobile App Download
முதன் முறையாக உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்யபோகிறேன் என கூறிவிட்டு பாக்கியா வீட்டை விட்டே கிளம்புகிறார். குடும்பத்தினர்கள் அனைவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கூட பாக்கியா கேட்பதாக தெரியவில்லை. இதனிடையே, கோபியிடம் இனியா உங்களை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நீங்கள் அம்மாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டீர்கள். எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவே இல்லை என கூறி அழுகிறார். என்ன தான் கோபி ராதிகாவை திருமணம் செய்ய நினைத்தாலும் இனியா மீது கோபி உண்மையாகவே அன்பாக தான் நடந்துகொண்டார்.
வாகன ஓட்டிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி – டீசல் விலை 40 ரூபாய் குறைவு!
இதற்கு நடுவே எவ்வளவு சீக்கிரமாக கோபியை விட்டு செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மயூவை அழைத்துக்கொண்டு துபாய் சென்று விட வேண்டும் என ராதிகா நினைக்கிறார். ஆனால், ராதிகாவின் அண்ணனும், அம்மாவும் கோபியை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், பாக்கியாவும் செல்வியும் நியாயம் கேட்க ராதிகாவின் வீட்டிற்கு வருகின்றனர். அதாவது, கோபியுடன் சேர்ந்து வாழுமாறு பாக்கியா கூறுவாரா அல்லது ராதிகாவுடன் சண்டை போட போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.