தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய மனு தாக்கல் – அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றது. இதனை காண தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை புரிவர். இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் விலங்குகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை மெரினாவில் லட்ச கணக்கான மக்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்.
MCC NEET UG 2022 – 2ம் கட்ட இட ஒதுக்கீடு – இன்று இறுதிப்பட்டியல் விவரங்கள்!
Follow our Instagram for more Latest Updates
இது ஓரு இளைஞர்கள் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக வழக்கம் போல ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.