Post Office ல் மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் – முழு விவரங்கள் இதோ!
அஞ்சல் துறையில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கும்படியான சிறப்பான சேமிப்பு திட்டம் இருக்கிறது. அந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post Office:
இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்காக பல சிறப்பான நலத் திட்டங்களை செய்துகொண்டிருக்கிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கும் பலவிதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அஞ்சல் துறை உயர்த்தியுள்ளது. அதாவது, அஞ்சலகங்களில் மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டங்கள் ரூ.1997.9 கோடியில் இருந்து ரூ.32507.87 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மூத்த குடிமக்கள் நல்ல மாத வருமானத்தை பெற முடியும்.
தற்போது மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும், அதிகமாக 7.4 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, 7.4 சதவீத வட்டியில் காலாண்டுக்கு ரூ.10,000 வைப்புத் தொகையில் ரூ.185 பெறலாம். இந்த திட்டத்தில் குறைந்தப்பட்சமாக ரூ.1000 முதலீடு செய்துகொள்ளலாம் மற்றும் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரைக்கும் கூட டெபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு வரி விலக்கு உண்டு.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் – 22ம் தேதி டோக்கன் வெளியீடு!
Exams Daily Mobile App Download
கடந்த 2013 முதல் 2014 ஆம் ஆண்டில் மட்டுமே மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்தில் ரூ.1997.90 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல, 2014-15 ஆம் ஆண்டில் ரூ.3,007.05 கோடியும், 2015-16 ஆம் ஆண்டில் ரூ.12,155.19 கோடியும், 2016-17 ஆம் ஆண்டில் ரூ.10,001.18 கோடியும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ.16,457.86 கோடியும், 2018-19 ஆம் ஆண்டில் ரூ.19,320.31 கோடியும், 2019-20 ஆம் ஆண்டில் ரூ.24,595.54 கோடியும், 2020-21 ஆம் ஆண்டில் ரூ.29,136.59 கோடியும், 2021-22 ஆம் ஆண்டில் ரூ.32,507.89 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்