தமிழக வட்டார கல்வி அலுவலர் (BEO) இறுதி பட்டியல் – தேர்வர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான (BEO) தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாதங்கள் ஆன பின்னும் இறுதி பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியுள்ளது.
BEO தேர்வு
தமிழக அரசின் தொடக்கக்கல்வி சார்நிலை பணியில் வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன்படி 97 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளில் தமிழகம் முழுவதும் உள்ள 42,686 பி.எட் பட்டதாரிகள் கலந்து கொண்டனர். தேர்வுகள் முடிந்த 5 நாட்கள் கழித்து தேர்வுக்கான உத்தேச விடைத்தாள்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.
TN Job “FB Group” Join Now
பிறகு 11 மாதங்கள் கழித்து இந்த தேர்வுக்கான முடிவுகளும், மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியாகின. பொதுவாக தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே அந்த பணிக்கான இறுதி தேர்வு பட்டியல் அறிவிக்கப்படுவதுண்டு. ஆனால் வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்னும் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இது குறித்து தேர்வாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 2,73,810 பேருக்கு கொரோனா – 1,619 பேர் பலி!!
இணைய வழியில் தேர்வு நடத்துவதன் முக்கிய நோக்கமே தேர்வு முடிவுகள் சீக்கிரம் வெளியிடப்பட வேண்டும் என்பது தான். ஆனால் 42,686 பேர் மட்டுமே பங்கேற்ற தேர்வுகளின் இறுதி பட்டியலை ஒரு ஆண்டு ஆகியும் வெளியிடவில்லை என தேர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இனி மேலும் தாமதப்படுத்தாமல் வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான இறுதி தேர்வு முடிவு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து வெளியிட வேண்டும் என தேர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.