Chat GPT மென்பொருளை பயன்படுத்த தடை – பெங்களூர் கல்லூரியில் அதிரடி உத்தரவு!!
Chat GPT என்பது ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு மென்பொருளாகும். தற்போது இதனை பயன்படுத்தி பல மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பெங்களூரில் கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்த தடை என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Chat GPT
தற்போது Chat GPT என்னும் (Online Chatbot) செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆனது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Chat GPT அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான OpenAIல் உருவாக்கப்பட்ட சாட்போட் ஆகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான முறையில் பதில்களை தருகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
Chat GPT இணையத்தில் கொட்டிக் கிடக்கும் பல வகையான தகவல்களை சேகரித்து, மனிதர்கள் போல அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்குகிறது. இந்த நிலையில் Chat GPT-ஐ பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் பெங்களூரில் பல கல்லூரிகளில் ChatGPT, Github Copilot, Blackbox மற்றும் பிற AI கருவிகளை மாணவர்கள் கல்வி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
TANCET 2022 வினாத்தாள்கள் – Download Now !
அதன்படி பெங்களுரில் RV பல்கலைக்கழகம் சார்பாக வெளியிட்ட அறிவிப்பில், மாணவர்கள் கல்வி நோக்கங்களுக்காக சாட்போட்டைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கு முதற்கட்டமாக மாணவர்கள் ChatGPT மற்றும் பிற AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் Assignments-ஐ AI கருவிகளின் உதவியின்றி சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.