PMAY திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை – மேற்கு வங்க அரசு மத்திய அரசுக்கு கடிதம்!!
PMAY திட்டத்தின் கீழ் நாட்டில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இத்திட்டத்திற்கான மானியம் இன்னும் அனுப்பப்படவில்லை எனவும் உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.
PMAY:
நாட்டில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pmay) திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2022 க்குள் சுமார் 20 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் காலம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதனால் இதனை ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியது. இதனை தொடர்ந்து, மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு இன்னும் மானியம் வழங்கப்படாமல் உள்ளது. அதனால் மேற்கு வங்க அரசு மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
TN கிராம உதவியாளர் தேர்வு முடிவுகள் 2023 – அரசு அதிகாரப்பூர்வ வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த கடிதத்தில், பிரதமர் ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிதியை உடனடியாக வழங்கவில்லையெனில் 11.5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும் மாநில அரசு சார்பாக இத்திட்டத்தின் கீழ் 40% செலவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.