BEL இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.40,000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியாவில் 75 டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா அலை தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. மக்கள் பலரும் தங்களின் வேலையை தேடி அலைந்து வருகின்றனர். இந்த நேரத்தில் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன் வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் போட்டி தேர்வுகள் குறித்தும் தகவல்கள் வந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் முக்கிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் UPSC தேர்வின் முதல் நிலை தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு நிறுவனமான பெல் 9 பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) இந்தியா காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பயிற்சி பொறியாளர் பதவிகளில் 75 காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.E./B.Tech (Computer Science & Engineering/ Electronics/Electronics) கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
மேலும் வயது வரம்பு 01.02.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுக்கும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், சலுகை உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக பிப்ரவரி 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தெடுக்கப்படுவர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000, இரண்டாம் வருடம் ரூ.35,000, மூன்றாம் வருடம் ரூ.40,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.