ரூ.45,000/- சம்பளத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு – பொறியியல் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

0
ரூ.45,000/- சம்பளத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு - பொறியியல் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
ரூ.45,000/- சம்பளத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு - பொறியியல் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
ரூ.45,000/- சம்பளத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு – பொறியியல் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அதன் மென்பொருள் மேம்பாட்டு மையமான விசாகிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக அடிப்படையில் Trainee Engineer மற்றும் Project Engineer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 23.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

பெல் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

Trainee Engineer பதவிக்கு 40 பணியிடங்கள் மற்றும் Project Engineer பதவிக்கு 60 பணியிடங்கள் என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. மென்பொருளில் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். 01.09.2022 தேதியின் படி, Trainee Engineer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். Project Engineer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 55% மதிப்பெண்களுடன் B.E/B.Tech/B.Sc (Engg. – 4 years) in CSE/IS/IT முடித்திருக்க வேண்டும். B.E/B.Tech/B.Sc (Engg. – 4 years) in Electronics / Telecommunication / Electronics & Communication / Electronics & Telecommunication / Communication / Mechanical / Computer Science / Computer Science & Engineering / Computer Science Engineering / Information Science / Information Technology / Electrical முடித்தவர்கள் Project Engineer பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.45,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பதாரர் வழங்கிய மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும். மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!