BEL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Engineer-I பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Project Engineer-I பதவிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. Electronics பிரிவில் 21 பணியிடங்களும், Mechanical பதவிக்கு ஒரு பணியிடமும் காலியாக உள்ளது.
- பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் விதிகளின் படி, 01.07.2022 அன்றைக்குள் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து B.E / B.Tech / B.Sc Engineering முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களுக்கு ஒப்பந்தத்தின் 1வது, 2வது, 3வது ஆண்டு மற்றும் 4வது ஆண்டுக்கு முறையே ரூ.40,000/-, ரூ.45,000/-, ரூ.50,000/- மற்றும் ரூ.55,000/- என ஒருங்கிணைக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.
- ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- WD, SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்றும் மற்றவர்களுக்கு ரூ.472/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.