தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறக்கும் எழில் – “பாக்கியலட்சுமி” சீரியல் கதையில் திடீர் திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் மன்மத லீலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவரது மகன் எழில் கணவரை இழந்து தவிக்கும் அமிர்தாவிற்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் விபத்து ஒன்றில் எழிலிற்கு அடிபட்டு பழசு எல்லாம் மறந்துவிடுகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல சுவாரஸ்யமான காட்சிகள் வருகிறது. கோபி ராதிகா கதை ஒரு பக்கமும், பாக்கியா தொழிலை எப்படி முன்னேற்ற போகிறார் என்பது எல்லாம் மறுபக்கமும் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே எழில் அமிர்தா காதல் பார்க்கவே அழகாக இருக்கிறது. எழில் அமிர்தாவை காதலிக்க அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கணவன் இல்லாதது தெரிந்தும் கூட மீண்டும் அமிர்தா மீது அதே காதலுடன் இருக்கிறார். பின் அமிர்தாவிற்கு குழந்தை இருப்பது தெரிந்தும் கூட அமிர்தா மீது காதல் குறையவே இல்லை.
Exams Daily Mobile App Download
தன்னுடைய காதலை முதலில் அமிர்தாவிடம் சொல்ல அதை அமிர்தா ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் அமிர்தாவின் அம்மா அப்பாவிடம் இது பற்றி சொல்கிறார். அதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அமிர்தா ஆசைப்பட்டால் திருமணம் செய்து கொள்ளட்டும் என நினைக்கிறார்கள். இந்நிலையில் அமிர்தாவின் மனம் மாறும் வரை எழில் பொறுமையாக இருக்கிறார். எல்லா இடங்களிலும் எழில் நடந்து கொள்வதை பார்த்து அமிர்தாவிற்கு எழிலை பிடிக்கிறது.
ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க இன்றைய எபிசோடில் அவர் வெளியே காட்டி விடுகிறார். எழில் என்னை நம்பி வாங்க என நம்பிக்கை கொடுக்கிறார். இந்நிலையில் இனி வர போகும் எபிசோடுகளில் எழில் குடும்பத்திற்கு விஷயம் தெரிய பல போராட்டங்களுக்கு பின்உண்மை தெரிய வருகிறது. ஆனால் எழில் விபத்து ஒன்றில் சிக்க அதனால் அவருக்கு தலையில் அடி படுகிறது. அவருக்கு பழைய நியாபகம் எல்லாம் போய்விட அவர் அமிர்தாவை கூட மறந்துவிடுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.