BE சிறப்பு கலந்தாய்வு, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

0
BE சிறப்பு கலந்தாய்வு, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
BE சிறப்பு கலந்தாய்வு, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
BE சிறப்பு கலந்தாய்வு, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. எனவே செப்டம்பர் 18ம் தேதி சேர்க்கை ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறியுள்ளார்.

பொறியியல் கலந்தாய்வு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்தது தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் படங்கள் நடத்தப்பட்டு வந்தது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. மேலும் முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் உயர்கல்வியில் விருப்பமான பிரிவினை தேர்வு செய்து வருகின்றனர்.

Jioவின் ரூ.75 மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் – புதிய அறிமுகம்!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பங்கள் குவிந்தது. இந்த வருடம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 83 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 440 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 மொத்த இடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தனியார், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற உறுப்பு கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளும் இதில் அடங்கும்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? நாளை அறிக்கை தாக்கல்!

எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் மூலம் நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர்கள் பலர் மருத்துவத்திற்கு சென்று விடுவதால் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பதற்காக ஐந்து முறை கவுன்சிலிங் நடத்த வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அமலுக்கு வரும் என்றும் செப்டம்பர் 18-ம் தேதி சேர்க்கை ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!