தமிழகத்தில் நாளை BE பொது பிரிவு கலந்தாய்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் நாளை BE பொது பிரிவு கலந்தாய்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நாளை BE பொது பிரிவு கலந்தாய்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நாளை BE பொது பிரிவு கலந்தாய்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் நாளை தொடங்க இருந்த பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விரிவான தகவல்கள் கீழே உள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஇ கலந்தாய்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.

மேலும் இந்த மாணவர்களுக்கு தரவரிசையை இறுதி செய்வதற்கான ரேண்டம் எண், கடந்த 2ம் தேதி ஒதுக்கப்பட்ட நிலையில், இதையடுத்து மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் தான் மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட கவுன்சிலிங் கடந்த 20ம் தேதி தொடங்கப்பட்டு, இதில் மாற்றுத்திறனாளிகள் , முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள், அதை தொடர்ந்து விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் மற்றும் அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி & சேலை – டெண்டர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் முதல் கட்ட கவுன்சிலிங் 23ம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதையடுத்து தொழில் பாடப்பிரிவு மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி பொது கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதாவது நான்கு சுற்றுகளாக அக். 21 வரை பொது கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த நிலையில் நாளை தொடங்க இருந்த பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமாவதால் பொது பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!