IPL ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மீண்டும் இந்திய மண்ணில் கிரிக்கெட் தொடர்! BCCI அறிவிப்பு!

0
IPL ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மீண்டும் இந்திய மண்ணில் கிரிக்கெட் தொடர்! BCCI அறிவிப்பு!
IPL ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மீண்டும் இந்திய மண்ணில் கிரிக்கெட் தொடர்! BCCI அறிவிப்பு!
IPL ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மீண்டும் இந்திய மண்ணில் கிரிக்கெட் தொடர்! BCCI அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாய் 2021 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இந்த ஆண்டு மீண்டும் கொரோனா 3 ஆம் அலை பரவி வருவதால் 2022 IPL தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்று கேள்வி எழுந்த நிலையில் தற்போது இது குறித்து BCCI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BCCI அறிவிப்பு:

நாடு முழுவதும் 3 வது அலை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா மற்றும் அதிக பரவல் ஆற்றல் உடைய ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்று கேள்வி எழுத நிலையில் தற்போது இது குறித்து BCCI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் – சிறு தானியங்கள் விற்பனை! அரசாணை வெளியீடு!

கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு IPL போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான IPL அணிகளின் ஏலமும் துபாயில் நடந்தது. தற்போது துபாயில் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடரை துபாயில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் தென்னாப்பிரிக்காவில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆலோசனை நடத்திய நிலையில் இந்த ஆண்டு IPL தொடர் இந்தியாவிலையே நடத்த இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பிப்ரவரி 28 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!

மும்பையின் மூன்று மைதானங்கள்- வான்கடே, பிரபோர்ன் மற்றும் மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியம் ஆகிய மூன்று மைதானத்திலும் மேலும் புனேவில் உள்ள 3 மைதானத்திலும் இந்த ஆண்டு IPL போட்டிகள் நடைபெறும் என்று BCCI யிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்று மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. மும்பையில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பிசிசிஐ தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் நிலவரத்தை கண்காணித்து பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!