பிப்ரவரியில் தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் – BCCI திட்டம்! அருண் துமால் பேட்டி!
2022 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக BCCI யிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது குறித்து BCCI அதிகாரி அருண் துமால் பேட்டியளித்துள்ளார்.
BCCI திட்டம்:
கொரோனாவின் 3 வது அலை பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் ,மாநில அரசும் முன்னெச்சரிக்கை பல்வேறு நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இதைதொடர்ந்து நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் அனைத்திற்கும் இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI தடை விதித்தது. அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரை ஒட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் BCCI அறிவிப்பின் படி ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – பிப்ரவரி 15 வரை விடுமுறை அறிவிப்பு!
மேலும் நடப்பு 2021-22 பருவத்திற்கான ரஞ்சி கோப்பை சி.கே. நாயுடு கோப்பை மற்றும் மகளிர் சீனியர் இருபது ஓவர் லீக் ஆகிய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் பெரிதும் நடைபெறவில்லை. நடைபெற்று கொண்டிருக்கும் போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே இன்று 2022 ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளதாக BCCI தெரிவித்துள்ளது. தற்போது இது குறித்து BCCI அதிகாரி அருண் துமால் பேட்டியளித்தார்.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! மெகா ஏலத்தில் கேப்டன் MS தோனி!
அப்பேட்டியில் ரஞ்சி கோப்பையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் தொடங்கவுள்ளோம் என்றும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் நோய் பாதிப்புகள் குறைந்து வருவதால் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு மேல் இத்தொடர் நடைபெறும் என்றும் தெரிவித்தார் . மேலும் அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடத்துவதற்கு கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று துமல் கூறினார். இதைதொடரந்து பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி கண்டிப்பாக IPL மெகா ஏலம் நடைபெறும் என்று பேட்டியளித்தார்.