BBNL மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – விண்ணப்பிக்க ஜூன் 17 இறுதி நாள்..!
பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) நிறுவனமானது சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Consultant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை அறிந்து கொண்டு அதன் பின், தகுதியானவர்கள் மட்டும் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Exams Daily Mobile App Download
BBNL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Consultant பணிக்கு என்று 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் CA / ICWA / Graduate / PGDM / M.Com / MBA in Finance ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு நிறுவனங்களில் வழக்கமான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் E7 / JAG இதற்கு கீழுள்ள பதவிகளில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
- MS office, Word, Excel, PPT தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
- 03.06.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப BBNL ஊதிய முறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள். ஊதியம் குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
- இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
BBNL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் அனுப்ப வேண்டும். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.