பிக் பாஸ் அல்டிமேட் | முதல் வாரத்திலேயே வெளியேறிய சுரேஷ் தாத்தா – ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே பல சண்டைகளை பார்த்து வரும் நிலையில், தற்போது முதல் எவிக்சனாக சுரேஷ் தாத்தா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவிக்சன்:
விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக 5 சீசன் ஒளிபரப்பாகியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து OTT தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனையும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே இதற்கும் அதிக ஆதரவு மக்கள் மத்தியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் இருந்து விலகிய ஷிவாங்கி? வெளியான ஷாக்கிங் தகவல்!
ஆனால் நினைத்த அளவிற்கு மக்களிடத்தில் இருந்து வரவேற்பு கிடைக்கவில்லை என்பது தான் நிஜம். இதுவரை 5வந்த சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தான் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதில், முதல் வார எலிமினேஷன் லிஸ்டில் 8 போட்டியாளர்கள் இருந்தனர். அவர்களில் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுரேஷ் தாத்தா தான் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். முதல் வாரத்திலேயே சுரேஷ் தாத்தா மிகவும் சர்ச்சையான பல விஷயங்களையும் பற்றி கருத்துக்களையும்கூறி வந்தார். போன சீசனில் இவர் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பல சண்டைகளுக்கும் காரணமாக இருந்துள்ளார். இருப்பினும், முதல் வாரத்திலேயே சுரேஷ் தாத்தா வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.