2வது திருமணத்திற்கு பிறகும் தாலி ஏன் அணியவில்லை? ஜூலி கேட்ட கேள்வி! தாமரை சொன்ன விளக்கம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தாமரைச்செல்வி. அவர் அதற்கு முன்னதாக நாட்டுப்புற கலைஞராக இருந்தவர். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அவரிடம் ஜூலி கேட்ட கேள்விக்கு அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
பிக்பாஸ் தாமரை:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. சாதாரண மனிதராக இந்த நிகழ்ச்சிக்கு வந்து பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் தான் பிக்பாஸ் தாமரை. அவர் வந்த நாள் முதல் தன்னுடைய வெகுளியான குணத்தால் ஏகப்பட்ட மக்களை கவர்ந்தார். ஐந்தாவது சீசனில் 95 நாட்கள் வரை இருந்து அவர் எலிமினேட் ஆனார்.
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!
இந்நிலையில் அவருக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மூன்று வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் அந்த நிகழ்ச்சியில் தாமரையிடம் ஜூலி ஒரு கேள்வி கேட்டார். தாமரை ஏற்கனவே தனக்கு இரண்டாவது கணவர் தான் இவர் என சொல்லி இருந்தார். அதனால் இரண்டாவது ,முறை திருமணம் செய்தும் ஏன் தாலி போடவில்லை என ஜூலி கேட்டிருந்தார்.
தினசரி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அதற்கு தாமரை சொன்ன விளக்கம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது அவருக்கு திருமணம் ஆகும் போது கவரிங் தாலி தான் கட்டிக் கொண்டாராம். அதன் பின் கவரிங் ஒப்புக் கொள்ளாமல் போனதால் தாலி போடவில்லையாம். இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போகும் போது தான் தாலி தங்கத்தில் வாங்கி போட வேண்டும் என தாமரை பதில் அளித்து இருக்கிறார்.