தாமரை செல்விக்கு அடிச்ச லக்கா.. அதிரடியாக வாய்த்த சினிமா சான்ஸ் – அவரே வெளியிட்ட புகைப்படம்!
விஜய் டிவியில் பலரின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் கலந்து கொண்டு பிரபலமானவர் தாமரைச் செல்வி. நாடகக் கலைஞரான அவர் தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் தாமரை செல்வி
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது திறமையால் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை ரசிகர்களை கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக களமிறங்கியவர் தான் தாமரை செல்வி. இதற்கு முன்னதாக அவர் நாடகக் கலைஞராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் பரிட்சயம் இல்லாத அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அருமையாக விளையாடி மக்களின் விருப்பமான போட்டியாளராக மாறினார். மேலும் வார இறுதி நாட்களில் மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார். அதன் பின் வெளியே வந்த அவர் தனது கணவருடன் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவருடைய நடன திறமைக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்தது.
TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? தேர்வில் நீங்கள் வெற்றி பெற இதை மட்டும் செய்தாலே போதும்!!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்த தாமரை செல்வி தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவர் பிரபல நடிகர்கள் ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோருடன் சினிமா படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். ரசிகர்கள் இந்த இரு பிரபலமான நடிகர்களில் ஒருவருக்கு தாமரை ஜோடியாக நடிக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் அவர் சினிமாவில் முன்னேற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.