பிக் பாஸ் வரலாற்றில் புதிய Twist.. ஒரே நேரத்தில் வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் – ரசிகர்கள் ஷாக்!
இந்த வார இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட உள்ளனர். அது பற்றிய தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
பிக் பாஸ்:
ஐந்து வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் எக்கசக்க நெகடிவ் கமெண்டுகளை பெற்றது. ஆனால் குறுகிய காலத்திலேயே நல்ல புகழை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. அதனால் தற்போது வரை 5 சீசன்கள் முடிந்து தற்போது ஆறாவது சீசன் தொடங்கப்பட்டு டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது வரை 7 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் இந்த வாரம் தனலட்சுமி, ஜனனி, கதிர், மைனா நந்தினி, குயின்சி, ரட்சிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே போட்டியில் அசிம், தனலட்சுமி தவிர கன்டென்ட் யாருமே கொடுக்கவில்லை என்ற புகார் உள்ளது. கமல் அவர்களும் இது பற்றி பலமுறை போட்டியாளர்களிடம் கூறிவிட்டார்.
விறுவிறுப்புடன் தொடங்கிய ஏலியன் & பழங்குடியினர் டாஸ்க்.. ஷிவினை அழ வைத்த தனம் – பிக்பாஸ் ப்ரோமோ!
Exams Daily Mobile App Download
இருப்பினும் housemates கேட்டபாடில்லை. இதனால் போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க புது யுத்தியை பிக் பாஸ் குழு புகுத்த உள்ளது. அது தான் Double Eviction. அதன்படி இந்த வாரம் குயின்சி, மைனா நந்தினி வெளியேற்றப்பட உள்ளனராம். இது போட்டியின் சுவாரசியத்தை ரசிகர்களுக்கு கூட்டும். மேலும் போட்டியாளர்களும் தீவிரம் தெரிந்து விளையாடுவர் என்பதால் இந்த முடிவை பிபி குழு எடுத்துள்ளதாம்.