மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.28,000 ஆக உயர்வு? பிரதமரின் முடிவு என்ன!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு தனது பணியாளர்களுக்கு அண்மையில் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வை அதிகரித்து. அதன்படி தற்போது 31% வரை அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனை தொடர்ந்து ஊதிய உயர்வு வேண்டியும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாட்களாக கோரிக்கையான 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதிக்கு முன் ஃபிட்மென்ட் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக 2016ம் ஆண்டு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.6,000ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ஊதியம் உயர்த்தப்பட்டால் ரூ.28,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த முழு விபரங்கள்!
மேலும் ஊதியம் உயர்வு கிடைத்தால் அதனை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகளும் என்று கூறப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்தி வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில் சம்பள உயர்வில் பிரதமரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைந்து வருகின்றனர்.