மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடிப்படை சம்பளம் உயர்வு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பிட்மென்ட் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் அடிப்படை சம்பளம் உயரும்.
சம்பள உயர்வு:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. பிறகு 31% ஆக உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு 9,488.70 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 2022ம் ஆண்டில் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற தகவல் வந்துள்ளது.
பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் ரிலீஸ் நேரம் அதிகாரப்பூரவ அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!
அதனை தொடர்ந்து சம்பள உயர்வு, நிலுவையில் உள்ள அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு போன்றவைகள் இந்த ஆண்டு உயர்த்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அதன்படி பிட்மெண்ட் தொகை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்தப்போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக் கூடும். மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் 8,000 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு – 48 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது வெளியாகிய தகவலின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3%அகவிலைப்படி அகவிலைப்படி உயர்ந்தால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் 34% அகவிலைப்படி மூலம் ரூ.6,120 சம்பளம் கூடுதலாக கிடைக்கும். இந்த நேரத்தில் சம்பள உயர்வு குறித்தும் ஆலோசித்து வருவதால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிட்மென்ட் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.