IPL 2021 – SRH அணியில் பேரிஸ்டோவ், பஞ்சாப் அணியில் இருந்து டேவிட் மாலன் விலகல்!
ஐபிஎல் போட்டிகளில் இருந்து கலந்து கொள்லாமல் வெளிநாட்டு வீர்ரகள் வரிசையாக வெளியேறி வருகின்றனர். இதனால் அணி நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
பேரிஸ்டோவ், டேவிட் மாலன் விலகல்:
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் ஆகும். கொரோனா தொற்று பரவியதால் கடந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி நடத்தி முடிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற நேரத்தில் வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
IPL 2021 அப்டேட்ஸ்: துபாய் பறக்கும் சென்னை, மும்பை வீரர்கள்! என்னென்ன கட்டுப்பாடுகள்?
அதன் பின்னர் இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. வரும் செப்.19 தேதி முதல் மீண்டும் இப்போட்டிகள் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் அங்கம் வகித்த வெளிநாட்டு வீரர்கள் வரிசையாக வெளியேறி வருகின்றனர். கொரோனா தொற்று, சர்வதேச போட்டிக்கு முன் ஓய்வு என பல்வேறு காரணங்களினால் விலகி உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற டேவிட் மாலன் உலக கோப்பை மற்றும் T20 போட்டிகளுக்கு முன் ஓய்வு எடுக்க விரும்புவதால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் மார்க்கரம் சேர்க்கப்பட்டுள்ளார்.
ICC Men’s T20 World Cup 2021 – 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு!
அதே போல் சன்ரைசர்ஸ் ஹைராபாத் அணியில் அங்கம் வகித்த பேரிஸ்டோவ் தற்போது விளக்கியுள்ளார். அதே போல் பஞ்சாப் அணியில் நாதன் எல்லிஸ், அடில் ரஷித் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா னையில் பேட் கம்மின்ஸ்க்கு பதிலாக டிம் சவுதி சேர்க்கப்பட்டுள்ளார்.