அப்பா யார் என கேட்ட லட்சுமி, பாரதி சொன்ன நெகிழ்ச்சியான பதில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
அப்பா யார் என கேட்ட லட்சுமி, பாரதி சொன்ன நெகிழ்ச்சியான பதில் - இன்றைய
அப்பா யார் என கேட்ட லட்சுமி, பாரதி சொன்ன நெகிழ்ச்சியான பதில் - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
அப்பா யார் என கேட்ட லட்சுமி, பாரதி சொன்ன நெகிழ்ச்சியான பதில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதி தான் அப்பா என லட்சுமியிடம் சொல்ல, பாரதி உன் அம்மா பொய் சொல்வதாக சொல்கிறார். பின் வருண் போட்டோவை காட்டி விடுவார் என நினைத்து பார்க்கிறார். பின் பாரதி லட்சுமியிடம் உன் அம்மா அப்பா இரண்டுமே இவங்க தான் என கண்ணம்மாவை காட்டுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதியை காட்டி இவர் தான் உன்னுடைய அப்பா இனிமேல் இவரை நீ அங்கிள் என கூப்பிட கூடாது அப்பா என்று தான் கூப்பிட வேண்டும் என சொல்ல லக்ஷ்மி ஆசையாக வருகிறாள் ஆனால் பாரதி நான் அப்பா இல்லை பொய் சொல்வதாக சொல்ல, லட்சுமி ஏன் அம்மா பொய் சொன்ன என கேட்கிறார். பாரதி நான் உண்மையை சொல்கிறேன் என சொல்ல, நான் உன் அப்பா இல்லை, உங்க அம்மா பொய் சொல்வதாக சொல்கிறார். அப்போது பாரதி வருண் போட்டோவை காட்டி இவர் தான் உன்னுடைய அப்பா என சொல்ல, லட்சுமி போட்டோவை பார்த்து இவர் தான் அப்பாவா, அப்போ ஏன் என்னிடம் பொய் சொன்னாய் என கேட்கிறார்.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – பிளேயிங் 11 இல் சாஹர் இல்லை?

பின் கண்ணம்மா அப்படி எல்லாம் நினைத்து பார்க்க லட்சுமி அம்மா என் அப்பா யார் என்பதை சொல்லு என கேட்கிறார். ஆனால் சொல்ல முடியாமல் நிற்க லட்சுமியிடம் பாரதி நான் சொல்வதாக சொல்ல சொல்கிறார். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய, பாரதி நான் சொல்கிறேன் என அழைத்து நீ பிறந்ததில் இருந்து அப்பாவை பார்த்து இருக்கியா என கேட்கிறார். இல்லை என லட்சுமி சொல்ல, உனக்கு விவரம் தெரிந்தது முதல் உன்னை யாரு பார்த்துக் கொள்கிறார் என கேட்கிறார். அதுவும் அம்மா தான் என லட்சுமி சொல்ல, அப்போ நீ கலெக்டர் ஆக வேண்டும் என நினைத்து இரவு பகலாக கஷ்டப்படுவது யார் என கேட்க லட்சுமி அதுவும் என் அம்மா தான் என சொல்கிறார்.

அப்போ உனக்காக எல்லாம் செய்யும் அம்மாவை விட நீ பிறந்ததில் இருந்து உன்னை பார்க்க வராத அப்பாவை கேட்டு உன் அம்மாவை ஏன் கஷ்டப்படுத்துகிறாய் என பாரதி சொல்ல, இனிமேல் செய்ய மாட்டேன் என லட்சுமி சொல்கிறார். உனக்கு அம்மா அப்பா யார் என கேட்டால் இரண்டுமே உன் அம்மா தான் என சொல்ல வேண்டும் என சொல்கிறார். பின் லட்சுமி தவறை உணர்ந்து கண்ணம்மாவை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துகிறார்.

‘பதுங்கு குழிகளுக்கு செல்லுங்கள்’ – உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!

பின் கண்ணம்மாவிற்கு ஹேமா லட்சுமி கையை பிடித்து கேக் விட்டி அன்பாக ஊட்டிவிடுகின்றனர். அனைவரும் வாழ்த்து சொல்ல, பாரதிக்கு முக்கியமான போன் வருகிறது. அப்போது பாரதி கிளம்ப லக்ஷ்மியை போக சொல்லிவிட்டு சௌந்தர்யா பாரதியிடம் பேசுகிறார். நீ பேசியது எல்லாம் சரியானது உனக்கு கண்ணம்மா மீது கோவமாக இருந்தாலும் நீ பேசியது நியாயமானது என சொல்கிறார். லட்சுமி சின்ன குழந்தை அவளது மனது கஷ்டப்பட கூடாது என்பதற்காக தான் இப்படி பேசினேன் என பாரதி சொல்கிறார். பின் கண்ணம்மாவிடம் சௌந்தர்யா சரியான பதிலை சொல்லிவிட்டு போகிறார் என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!