வெண்பாவை திருமணம் செய்ய சொல்லும் ஷர்மிளா, பெண்ணை காப்பாற்ற கண்ணம்மா செய்த காரியம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவை நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய வேண்டும் என ஷர்மிளா சொல்கிறார். பின் கண்ணம்மா மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவரை அவரது கணவரிடம் இருந்து காப்பாற்றுகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிடம் ஷர்மிளா நான் சொல்லும் கண்டிஷன் எல்லாத்துக்கும் நீ சம்மதம் சொன்னதால் தான் உன்னை இந்த கேஸில் இருந்து வெளியே கொண்டு வந்தேன் என ஷர்மிளா சொல்ல, வெண்பா என்னை எல்லாருக்கும் தெரியும் நான் பாரதியை திருமணம் செய்தது ஊருக்கே தெரியும் அப்பறம் என்னை யார் திருமணம் செய்து கொள்வார் என வெண்பா கேட்கிறார். அப்போது ஷர்மிளா நான் காட்டும் மாப்பிள்ளை கண்டிப்பாக உன்னை அப்படி எதுவும் கேட்கமாட்டான் என சொல்கிறார். பின் வெண்பா அம்மா மாப்பிள்ளையை பார்த்துட்டாங்க போல என நினைக்கிறார்.
TN Job “FB Group” Join Now
மறுபக்கம் பாரதி மருத்துவமனைக்கு ஒரு தம்பதி வருகிறார்கள். மனைவி தலையில் அடிபட்டு இருக்க கணவர் பதறி பொய் டாக்டரை அழைக்கிறார். உடனே மனைவியை அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது. கணவன் மனைவியை நினைத்து வருத்தத்துடன் வெளியே இருக்க கண்ணம்மா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அப்போது எப்படி அடிபட்டது என கண்ணம்மா அவரிடம் கேட்க மாடியில் துணி காய போடும் போது வழுக்கி விழுந்துவிட்டால் என சொல்கிறார்.
பின் பாரதி மருத்துவம் பார்க்க அந்த பெண் வலியால் கத்துகிறார். பாரதி இந்த அளவிற்கு எப்படி அடிபட்டது என கேட்க அந்த பெண் சொல்ல தயங்குகிறார். சொன்னால் தான் டிரீட்மென்ட் பார்க்க முடியும் என பாரதி சொல்ல, வீட்டை சுத்தம் செய்யும் போது கண்ணாடி பொருள் தலையில் விழுந்துவிட்டதாக சொல்கிறார், அதை கேட்டு கண்ணம்மாவிற்கு அதிர்ச்சி ஆகிறது. பாரதி வெளியே வர கண்ணம்மா இந்த பெண்ணிற்கு அடிபட்டதை நினைத்து சந்தேகமாக இருப்பதாக சொல்கிறார். வெளியே அவரது கணவர் பதறி போய் இருக்கிறார் உள்ளே இந்த பெண் கணவரை வர சொல்ல வேண்டாம் என சொல்கிறார்கள். மேலும் அடிபட்ட காரணமும் வேற வேற சொல்வதாக சொல்கிறார்.
1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!
பாரதி இதெல்லாம் நமக்கு தேவை இல்லாத வேலை என சொல்ல அதை கேட்டு கண்ணம்மா அப்படி எல்லாம் விட கூடாது இதுவும் நம்ம கடமை தான் என சொல்கிறார். பின் உள்ளே சென்று கண்ணம்மா அந்த பெண்ணிடம் யாருக்கும் பயப்படாமல் உண்மையை சொல்ல சொல்ல அவர் தன்னுடைய கணவரை காதலித்து திருமணம் செய்தேன் ஆனால் அவர் என்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். நான் சென்று பணம் கொண்டு வந்தால் அதை சந்தேகப்பட்டு பேசுவதாக சொல்கிறார்.
உடனே கோவப்பட்ட பாரதியும் கண்ணம்மாவும் அந்த நபரிடம் நியாயம் கேட்கிறார்கள். அப்போது அவன் திமிராக என்னுடைய குடும்ப விஷயம் என சொல்கிறார். பின் மனைவியை சந்தேகப்பட நீயெல்லாம் ஒரு மனுசனா என கேட்க அதை கேட்டு அவர் திமிராக பேசுகிறார். கண்ணம்மாவிடம் சாதாரண ஒரு பெண் என்ன செய்ய போகிறாய் என அவர் கேட்க அதற்கு கண்ணம்மா போலீசில் பிடித்துக் கொடுக்க போகிறேன் என சொல்கிறார். அந்த நேரத்தில் போலீஸ் வர நான் தான் புகார் கொடுத்தேன் என சொல்கிறார். போலீசார் அந்த நபரை அழைத்து செல்கிறார்.