தன் அம்மா பெயர் ‘கண்ணம்மா’ என கண்டுபிடித்த ஹேமா – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!
இன்று ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமா தாங்கள் கண்ணம்மா வீட்டிற்கு சென்றதை பற்றி சௌந்தர்யாவிடம் கூறுகிறார். பின், கண்ணம்மாவிற்கு தலையில் அடிபட்டு விட்டதால் லட்சமி சமையல் செய்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று கண்ணம்மா வீட்டிற்கு சென்று விட்டு பாரதி மற்றும் ஹேமா இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். பாரதி வழிநெடுகிலும் கண்ணம்மா குறித்து யோசித்து கொண்டே வருகிறார். பின், ஹேமா தாங்கள் இருவரும் கண்ணம்மா வீட்டிற்கு சென்றோம் என்றும் கண்ணம்மா தங்களுக்காக முந்திரி பருப்பு போட்டு செய்த கேசரி செய்து தந்ததாகவும் பெருமையாக சௌந்தர்யா மற்றும் வேணுவிடம் கூறுகிறார். அதனை பாரதி உண்டதாக கூறியதும் வேணு மற்றும் சௌந்தர்யா இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
பின், சௌந்தர்யா, ‘உனக்கு மட்டும் கண்ணம்மா ஸ்வீட் கொடுத்துருக்காங்க, எனக்கு கொடுக்கல’ என்று கேட்கிறார். அதற்கு ஹேமா, ‘நானும் அப்பாவும் தான அவுங்களுக்கு நன்றி சொன்னோம். அதுனால தான் எனக்கு கொடுத்தாங்க’ என்று கூறுகிறார். பாரதி கண்ணம்மாவிடம் சுமூகமாக பேசி விட்டார் என்பதனை அறிந்து சௌந்தர்யா ஆனந்த கண்ணீர் விடுகிறார்.
தமிழகத்தில் ‘இந்த’ பணிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!
பின், ஹேமா தாங்கள் எடுத்துக் கொண்ட செல்பியை எடுத்து காட்டுகிறார். அதனை இன்ஸ்டாகிராமில் சௌந்தர்யா போட சொல்கிறார். இப்படியாக இருக்க, கண்ணம்மாவிற்கு தலையில் அடிபட்டதால் அவருக்கு உதவலாம் என்று சமையல் செய்ய இறங்குகிறார். பின், கண்ணம்மாவிற்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்து லட்சமி அசத்துகிறார்.
பின், கண்ணம்மா என்று அனைத்து இடங்களிலும் ஹேமா எழுதுகிறார். இது குறித்து அஞ்சலி மற்றும் சௌந்தர்யா கேட்கையில் தனது அம்மா பெயர் கண்ணம்மா என்பதனை தான் கண்டுபிடித்து விட்டதாக ஹேமா கூறுகிறார். இதனால் அஞ்சலி மற்றும் ஹேமா இருவரும் குழம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.