பாரதி, கண்ணம்மாவுக்கு கிடைக்க போகும் விவாகரத்து – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
பாரதி, கண்ணம்மாவுக்கு கிடைக்க போகும் விவாகரத்து - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
பாரதி, கண்ணம்மாவுக்கு கிடைக்க போகும் விவாகரத்து - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
பாரதி, கண்ணம்மாவுக்கு கிடைக்க போகும் விவாகரத்து – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அதிரடி காட்சிகள் வர இருக்கிறது. மீண்டும் பாரதி, கண்ணம்மா விவாகரத்து குறித்த எபிசோடுகள் ஒளிபரப்பு ஆக உள்ளது. பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்து விட்டு வெண்பாவை திருமணம் செய்து கொள்வாரா? அதற்கு வெண்பாவின் அம்மா சம்மதம் சொல்வாரா, என்று இனி வரும் நாட்களில் சீரியல் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த ட்விஸ்ட்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் தமிழில் எடுப்பதற்கு முன்னதாகவே, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய பல மொழிகளிலும் ஒளிபரப்பாகியது. இந்த சீரியல் அடுத்த கட்டத்திற்கு நகரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாரதி கண்ணம்மா சீரியலில் லக்ஷ்மிக்கு அப்பா யார் என்ற உண்மை தெரிந்துள்ள நிலையில், மறுபக்கம் ஹேமா கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.

கோபிக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன் என கைவிட்ட நீதிபதி – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

பாரதிக்கு கண்ணம்மா மீது சற்று கோவம் குறைந்தது போல தான் தெரிகிறது. பாரதிக்கு கண்ணம்மா இன்றைய எபிசோடில் வெண்பாவை கலாய்த்த கண்ணம்மாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி தகவல் காத்திருக்கிறது. அதாவது கண்ணம்மாவை பார்க்க ஹேமாவும் லட்சுமியும் மருத்துவமனைக்கு வந்திருக்கின்றனர். அப்போது எமர்ஜன்சி கேஸில் பாரதி பிஸியாக அவருக்கு ஃபோன் செய்த வெண்பாவை, கண்ணம்மா தாறுமாறாக வெறுப்பேத்துகிறார். இதனால் கோவம் அடைந்த வெண்பா வெறி பிடித்தது போல் வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் போட்டு உடைக்கிறார். ஆனால் இதை அவரின் அம்மா ஷர்மிளா எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்தார். பாரதி வேலையை முடித்து விட்டு வந்துவிட்டார்.

Exams Daily Mobile App Download

பின்னர் சாப்பிட வந்த பாரதி, ஹேமா லட்சுமியுடன் சேர்ந்து கேண்டீனில் சாப்பிடுகிறார். அந்த சமயத்தில் கண்ணம்மா, பாரதிக்கு நன்றி சொன்னார், பதிலுக்கு பாரதி கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி செய்தியை சொன்னார். மீண்டும் விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருவதாக சொன்னார். அதை கேட்டவுடன் கண்ணம்மா அழத் தொடங்கிவிட்டார். இந்த விஷயத்தை லட்சுமியும் கேட்டு விடுகிறார். கூடிய விரைவில் பாரதியுடன் சேர்ந்து விடலாம் என லட்சுமி குழந்தை ஒருபக்கம் கனவு காண்கிறாள். ஆனால் பாரதி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விவாகரத்து விஷயத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டார். இதையடுத்து பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் விவாகரத்து ஆகி விடுமா? அடுத்த ட்விஸ்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டு உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!