வெண்பாவிற்காக சௌந்தர்யாவை திட்டும் பாரதி – கண்ணம்மாவால் அழும் லட்சுமி! இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று அகிலுடன் தான் இருப்பேன் என்று அஞ்சலி பிடிவாதம் பிடிக்கிறார். அதே போல் பாரதி கண்ணம்மாவை சீமந்த விழாவிற்கு வரவழைத்ததற்காக தனது குடும்பத்தினருடன் சண்டையிடுகிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியல்
விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான சீரியல். இதில் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அஞ்சலியின் சீமந்த விழா முடிந்ததும் அஞ்சலியை தங்களது வீட்டிற்கு அழைத்து செல்ல அவரது பெற்றோர் முடிவு எடுக்கின்றனர். ஆனால், அகிலை விட்டு பிரிய மாட்டேன் என்று கூறிவிடுகிறார்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலின் 300 எபிசோடு வெற்றி கொண்டாட்டம் – விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!
கொஞ்ச நாட்கள் வாழ்ந்தாலும் அதனை அகிலுடன் தான் வாழ வேண்டும் என்று அஞ்சலி ஆசைப்படுகிறார். பின்னர், அஞ்சலியின் பெற்றோர்களும் சரி என்று கூறி விடுகின்றனர். வெண்பா தற்கொலை செய்வதில் இருந்து பாரதி அவரை காப்பாற்றி விட்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டினர் அனைவரிடமும் பாரதி சண்டையிடுகிறார். கண்ணம்மாவை அனைவரும் வேண்டுமென்றே தான் அழைத்து வந்ததாகவும், அஞ்சலியை வைத்து தனக்கும் வெண்பாவுக்கும் திருமணம் ஆகவில்லை என்று கூறியதாகவும் கூறுகிறார்.
அனைவரையும் நன்றாக திட்டியும் விடுகிறார். வெண்பாவை எப்படி அசிங்கப்படுத்தலாம்? என்று கேட்டு கோபப்படுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். பாரதி இப்படி வெண்பாவிற்காக பேசியது சௌந்தர்யா மற்றும் வேணு இருவருக்கும் எரிச்சலை வரவழைக்கிறது. மீண்டும், வெண்பாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பாரதி யோசிக்க கூடாது என்றும் நினைக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா – இந்த வார TRP ரேட்டிங்!
அஞ்சலியின் சீமந்த விழாவினை பார்க்கும் லட்சுமி கண்ணம்மாவிற்கும் இது போல் நடந்திருக்கும் சீமந்தம் பற்றி கேட்கிறார். ஆனால், இதனை கேட்டு கண்ணம்மா கொந்தளிக்கிறார். இனி லட்சுமிக்கு தான் மட்டும் தான் என்றும், சொந்தம் என்று யாருமே இல்லை என்றும் கத்தி விடுகிறார். இதனை அறிந்து லட்சுமி வேதனை அடைந்து அழுகிறார். இதனால் அடுத்து வரும் எபிசோடுகள் அனைத்தும் விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.